ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 1 முதல் 10 வரை
 
1. நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல்,-இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.
உரை
   
2. பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப-என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
உரை
   
3. தக்கணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா, கெடும்.
உரை
   
4. ‘வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-
முந்தையோர் கண்ட முறை.
உரை
   
5. ‘எச்சிலார், தீண்டார்-பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை’ என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
உரை
   
6. எச்சிலார், நோக்கார்-புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும்,தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.
உரை
   
7. எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு.
உரை
   
8. நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே,-எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார்.
உரை
   
9. நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.
உரை
   
10. தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல்,-ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்!
உரை