தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 11 முதல் 20 வரை
|
|
|
11. | உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்; உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார் ஒன்று உடுத்து என்றும் அவை புகார்;-என்பதே முந்தையோர் கண்ட முறை. | |
|
உரை
|
|
|
|
|
12. | தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்; பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு, குறை எனினும், கொள்ளார், இரந்து. | |
|
உரை
|
|
|
|
|
13. | நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா, கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும், நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின், நீர் தொடார், நோக்கார், புலை. | |
|
உரை
|
|
|
|
|
14. | நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,- நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்; காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே, ஆய்ந்த அறிவினவர். | |
|
உரை
|
|
|
|
|
15. | ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், நாயிறு, தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண் ஐம் பூதம் அன்றே கெடும். | |
|
உரை
|
|
|
|
|
16. | ‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன், நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத் தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே- யாவரும் கண்ட நெறி. | |
|
உரை
|
|
|
|
|
17. | ‘குரவர் உரை இகந்து செய்யார்; விரதம் குறையுடையார் தீர மறவார்; நிறை உவா மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்’ என்பதே- நல் அறிவாளர் துணிவு. | |
|
உரை
|
|
|
|
|
18. | நீராடி, கால் கழுவி, வாய் பூசி, மண்டலம் செய்து, உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார் உண்டார்போல் வாய் பூசிச் செல்வர்; அது எடுத்துக் கொண்டார், அரக்கர், குறித்து. | |
|
உரை
|
|
|
|
|
19. | ‘காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும் ஈரம் புலராமை ஏறற்க!’ என்பதே- பேர் அறிவாளர் துணிவு. | |
|
உரை
|
|
|
|
|
20. | உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து, தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும் பிறிது யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு, உண்க, உகா அமை நன்கு! | |
|
உரை
|
|
|
|