ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 31 முதல் 40 வரை
 
31. இரு தேவர், பார்ப்பார் இடை போகார்; தும்மினும்,
மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு
உடன் செல்க, உள்ளம் உவந்து!
உரை
   
32. புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார்.
உரை
   
33. பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர்.
உரை
   
34. பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிவோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
‘தந்திரத்து வாழ்தும்!’ என்பார்.
உரை
   
35. நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி, நிலை நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின்.
உரை
   
36. சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உறைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே;-என்றும்
கடன் அறி காட்சியவர்.
உரை
   
37. பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார்-திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலால்.
உரை
   
38. பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும்.
உரை
   
39. தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்!
உரை
   
40. உயர்ந்ததின் மேல் இரார்;-உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்;-குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து.
உரை