தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 41 முதல் 50 வரை
|
|
|
41. | கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்; புண்ணியம் ஆய தலையோடு உறுப்பு உறுத்த!- நுண்ணிய நூல் உணர்வினார். | |
|
உரை
|
|
|
|
|
42. | ‘தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின், ஈர்-ஆறு நாளும் இகவற்க!’ என்பதே- பேர் அறிவாளர் துணிவு. | |
|
உரை
|
|
|
|
|
43. | உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி, மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள், அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும் ஒட்டார்-உடன் உறைவின்கண். | |
|
உரை
|
|
|
|
|
44. | நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்; கோடி கடையுள் விரியார்; கடைத்தலை, ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்- தம் தலைக்கண் நில்லாவிடல்! | |
|
உரை
|
|
|
|
|
45. | துடைப்பம், துகட்காடு, புல் இதழ், செத்தல் கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும், பரப்பற்க, பந்தரகத்து! | |
|
உரை
|
|
|
|
|
46. | காட்டுக் களைந்து, கலம் கழீஇ, இல்லத்தை ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை, நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து, இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க- நல்லது உறல் வேண்டுவார்! | |
|
உரை
|
|
|
|
|
47. | அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும், அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை,-பார்ப்பார் இலங்கு நூல் ஓதாத நாள். | |
|
உரை
|
|
|
|
|
48. | கலியாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி, என்று ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க! பெய்க, விருந்திற்கும் கூழ்! | |
|
உரை
|
|
|
|
|
49. | உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும்- நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும், தத்தம் குடிமைக்கும் தக்க செயல்! | |
|
உரை
|
|
|
|
|
50. | பழியார்; இழியார்; பலருள் உறங்கார்; இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி, இல்லாரை எள்ளி, இகந்து உரையார்;-தள்ளியும், தாங்க அருங் கேள்வியவர். | |
|
உரை
|
|
|
|