ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 51 முதல் 60 வரை
 
51. மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று.
உரை
   
52. படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும் உரையாரே-என்றும்
அசையாத உள்ளத்தவர்.
உரை
   
53. தெறியொடு, கல்லேறு, விளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார்-நெறிப்பட்டவர்.
உரை
   
54. முறுவல் இனிதுரை, கால் நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப-தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
உரை
   
55. கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும்,-
நிகர் இல் அறிவினார் வேண்டார்-பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை.
உரை
   
56. முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில்.
உரை
   
57. பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;-
நோய் இன்மை வேண்டுபவர்.
உரை
   
58. எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
‘எங்கு உற்றுச் சேறிரோ?’ என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம்.
உரை
   
59. ‘உடம்பு நன்று!’ என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து.
உரை
   
60. யாதொன்றும் ஏறார், செருப்பு; வெயில் மறையார்;-
ஆன்று அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து.
உரை