ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 61 முதல் 70 வரை
 
61. வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல்-
நூல் முறையாளர் துணிவு.
உரை
   
62. கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று.
உரை
   
63. துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற
மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும்,
திறம் கண்டார் கண்ட நெறி.
உரை
   
64. பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார்,
மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு
ஆற்ற வழி விலங்கினாரே-பிறப்பினுள்
போற்றி எனப்படுவார்.
உரை
   
65. ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள் ஆயினும்,
சான்றார் தமித்தா உறையற்க-ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்!
உரை
   
66. கடை விலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்;
கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்;
இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்;-
‘கடைபோக வாழ்தும்!’ என்பார்.
உரை
   
67. தமக்கு உற்ற கட்டுரையும், தம்மின் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையும், அஃது அன்றிப்
பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின்,
வடுக் குற்றம் ஆகிவிடும்.
உரை
   
68. பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப்
பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து.
உரை
   
69. முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்;
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்;
‘இனியவை யாம் அறிதும்!’ என்னார்; கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின்.
உரை
   
70. உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும்,
வகை இல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும்
புணரார்-பெரியாரகத்து.
உரை