தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 71 முதல் 80 வரை
|
|
|
71. | இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும், குணனும், குலம் உடையார் கூறார்-பகைவர்போல் பாரித்து, பல் கால் பயின்று. | |
|
உரை
|
|
|
|
|
72. | பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,- வணங்கார்-குரவரையும் கண்டால்; அணங்கொடு நேர் பெரியார் செல்லும் இடத்து. | |
|
உரை
|
|
|
|
|
73. | நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல், இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின், அசையாது, நிற்கும் பழி. | |
|
உரை
|
|
|
|
|
74. | நின்றக்கால் நிற்க, அடக்கத்தால்! என்றும் இருந்தக்கால் ஏவாமை ஏகார்; பெருந்தக்கார் சொல்லின், செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும் வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்! | |
|
உரை
|
|
|
|
|
75. | உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்- எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும் கொள்ளார்;-பெரியார் அகத்து. | |
|
உரை
|
|
|
|
|
76. | விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய பரந்து உரையார்; பாரித்து உரையார்;-ஒருங்கு எனைத்தும் சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து! | |
|
உரை
|
|
|
|
|
77. | தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார், எம் மேனி ஆயினும் நோக்கார், தலைமகன்- தன் மேனி அல்லால் பிற. | |
|
உரை
|
|
|
|
|
78. | பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச் சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று தேர்வார்போல் நிற்க, திரிந்து! | |
|
உரை
|
|
|
|
|
79. | துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள் இன்ப வகையான் ஒழுகலும், அன்பின் செறப்பட்டார் இல்லம் புகாமை,-இம் மூன்றும் திறப்பட்டார் கண்ணே உள. | |
|
உரை
|
|
|
|
|
80. | தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும் நன்கு அறிவார் கூறார், முறை. | |
|
உரை
|
|
|
|