ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 81 முதல் 90 வரை
 
81. புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர்.
உரை
   
82. வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே;-பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்.
உரை
   
83. நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே;-என்றும்,
‘கடைபோக வாழ்தும்!’ என்பார்.
உரை
   
84. அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும் என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின் இழுக்கம் தரும்.
உரை
   
85. அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும்.
உரை
   
86. உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்!
உரை
   
87. கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம்-கட்டில்மிசை.
உரை
   
88. உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்;-
‘திறத்துளி வாழ்தும்!’ என்பார்.
உரை
   
89. எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு;
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்;-
மெய்யாய காட்சியவர்.
உரை
   
90. தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச் சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்!
உரை