ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 91 முதல் 100 வரை
 
91. மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தம், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார்-மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்.
உரை
   
92. தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க-அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல!
உரை
   
93. மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்;-விடல்!
உரை
   
94. கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்;-
ஐயம் இல் காட்சியவர்.
உரை
   
95. தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து, உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.
உரை
   
96. நந்து, எறும்பு, தூக்கணம்புள், காக்கை என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்.
உரை
   
97. தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை!
உரை
   
98. சூதர் கழகம், அரவம் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும்.
உரை
   
99. உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும்,-
நடுக்கு அற்ற காட்சியார்-நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்!
உரை
   
100. அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன் என்று
ஒன்பதின்மர் கண்டீர்-உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார்.
உரை