தொடக்கம் |
|
|
கைந்நிலை (புல்லங்காடனார்)
1. குறிஞ்சி
[1 முதல் 17 வரை துறைக்குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை] | |
1. | நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல் நிகர் இல் மட மான் நெரியும் மம...... சாரல் கானக நாடன் கலந்தான்இலன் என்று, மேனி சிதையும், பசந்து. | |
|
உரை
|
|
|
|
|
2. | வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம் வஞ்ச மலை நாடன் வாரான்கொல்?-தோழி!-என் நெஞ்சம் நடுங்கி வரும்! | |
|
உரை
|
|
|
|
|
3. | பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர் காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும், பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு ஆசையின் தேம்பும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
4. | ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன் தான் கலந்து உள்ளாத் தகையனோ,-நேரிழாய்!- தேம் கலந்த சொல்லின் தெளித்து? | |
|
உரை
|
|
|
|
|
5. | இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப் பிரசை இரும் பிடி பேணி வரூஉம் முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள் நிரையம் எனக் கிடந்தவாறு! | |
|
உரை
|
|
|
|
|
6. | மரையா உகளும் மரம் பயில் சோலை, உரை சால் மட மந்தி ஓடி உகளும் புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் உரையா வழங்கும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
7. | கல் வரை ஏறி, கடுவன் கனி வாழை எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு, ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை சொல்ல, சொரியும், வளை. | |
|
உரை
|
|
|
|
|
8. | கருங் கைக் கத வேழம் கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்...........................கரும் பெருங் கல் மலை நாடன் பேணி வரினே, சுருங்கும், இவள் உற்ற நோய். | |
|
உரை
|
|
|
|
|
9. | காந்தள் அரும் பகை என்று, கத வேழம் ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி, பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? | |
|
உரை
|
|
|
|
|
10. | பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன், மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள் இன்னே வரும்கண்டாய்-தோழி!-இடை யாமத்து என்னை இமை பொருமாறு? | |
|
உரை
|
|
|
|
|
11. | எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும் முறி கிளர் நல் மலை நாடன் வருமே- அறி துறைத்து, இவ் அல்லில் நமக்கு. | |
|
உரை
|
|
|
|
|
12. | நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி, கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக, ‘முடியும்கொல்?’ என்று முனிவான் ஒருவன் வடி வேல் கை ஏந்தி, வரும். | |
|
உரை
|
|
|
|