3. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
25. கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை
கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும்
வருவர் நம் காதலர்;-வாள் தடங் கண்ணாய்!-
பருவரல், பைதல் நோய் கொண்டு!
   
[26 முதல் 36 வரை துறைக் குறிப்புகள் இறந்துபட்டன.]
26. குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
... ... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்;-பொன் நேர் நிறத்தாய்!-
அரிது, அவர் வாராவிடல்.
   
27. ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ஒல்கப் புகுதரு
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி,
ஊர்தரும், மேனி பசப்பு.
   
28. ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... பெய்த புறவில் கடுமான் தேர்
ஒல்லைக் கடாவார்; இவர்காணின் காதலர்;
சில் ... ... ... ... ... ... ... ...
   
29. ... ... ... ... ... ... ... ... குருந்து அலர,
பீடு ஆர் இரலை பிணை தழுவ, காடு ஆர,
கார் வானம் வந்து முழங் ... ... ... ...
... ... ... ... ... ...
   
30. ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
கொன்றைக் கொடுங் குழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து.
   
31. ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... வானம்
வந்து துளி வழங்கக் கண்டு
   
32. கார் எதிர் வானம் கதழ் எரி சி... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... லக மெழு நெஞ்சே! செல்லாயால்,
கூர் எரி மாலைக் குறி.
   
33. தளை அவிழ் தே... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
உளையார் கலி நன் மாப் பூட்டி வருவார்,
களையாரோ, நீ உற்ற நோய்?
   
34. முல்லை எயிறு ஈன,... ... ... ...
... ... ... ன மல்கி,
கடல் முகந்து கார் பொழிய, காதலர் வந்தார்;
உடன் இயைந்த கெ ... ...
   
35. ... ... ... ... ...
... ...£ டைப் பால் வாய் இடையர்
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால்,
அரித ... ... ...
   
36. பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம்.