தொடக்கம் |
|
|
4. மருதம் பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
37. | கழனி உழவர் கலி அஞ்சி ஓடி, தழென மத எருமை தண் கயம் பாயும் பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர், பொழெனப் பொய் கூறாது, ஒழி. | |
|
உரை
|
|
|
|
|
பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து, தலைமகள் சொல்லியது | |
38. | கயல் இனம் பாயும் கழனி நல் ஊர! நயம் இலேம்; எம் மனை இன்றொடு வாரல்; துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின், குயில்... ... ... கொண்டு. | |
|
உரை
|
|
|
|
|
[இதன் துறைக்குறிப்பு மறைந்துபட்டது.] | |
39. | முட்ட முது நீர் அடை கரை மேய்ந்து எழுந்து, தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் கட்டு அலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டு, எம் இல் சுட்டி அலைய வரும். | |
|
உரை
|
|
|
|
|
வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது | |
40. | தாரா இரியும் தகை வயல் ஊரனை வாரான் எனினும், ‘வரும்’ என்று, சேரி புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள் கலப்புஅடும்; கூடும்கொல் மற்று? | |
|
உரை
|
|
|
|
|
வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது | |
41. | பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை? அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி நெறியின்,-இனிய சொல் நீர் வாய் மழலைச் சிறுவன் எமக்கு உடைமையால். | |
|
உரை
|
|
|
|
|
42. | நீத்த நீர் ஊரன் நிலைமையும், வண்ணமும், யார்க்கு உரைத்தி-பாண! அதனால் யாம் என் செய்தும்? கூத்தனாக் கொண்டு, குறை நீ உடையையேல், ஆட்டுவித்து உண்ணினும் உண். | |
|
உரை
|
|
|
|
|
43. | போது அவிழ் தாமரைப் பூந் துறை ஊரனைத் தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்; ஏதின்மை சொல்லி இருப்பர், பிறர் மகளிர், பேதைமை தம்மேலே கொண்டு. | |
|
உரை
|
|
|
|
|
[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.] | |
44. | தண் துறை ஊரன்,-தட மென் பணைத் தோளாய்!- ‘வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து, கோல வன முலையும் புல்லினான்’ என்று எடுத்து, சாலவும் தூற்றும், அலர். | |
|
உரை
|
|
|
|
|
45. | மூத்தேம், இனி;-பாண!-முன்னாயின், நாம் இளையேம்; கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப் பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி, நீத்தல் அறிந்திலேம், இன்று. | |
|
உரை
|
|
|
|
|
46. | கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன், நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;- பயம் இல் யாழ்ப் பாண!-பழுது ஆய கூறாது, எழு நீ போ, நீடாது மற்று. | |
|
உரை
|
|
|
|
|
47. | அரக்கு ஆம்பல், தாமரை, அம் செங்கழுநீர், ஒருக்கு ஆர்ந்த வல்லி, ஒலித்து ஆரக் குத்தும் செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய்,-பாண!- இருக்க, எம் இல்லுள் வரல். | |
|
உரை
|
|
|
|
|
48. | கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் மிக்க வன முலை புல்லான், பொலிவு உடைத்தா;- தக்க யாழ்ப் பாண!-தளர் முலையாய் மூத்து அமைந்தார் உத்தரம் வேண்டா; வரல். | |
|
உரை
|
|
|
|