|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
10
15
20
25
30
35 |
வேயா
மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோ
டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும்
கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும்
மரங்கொஃ றச்சருங் கருங்கைக் கொல்லருங்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங்
குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும |
|
|
அலைநீர்
ஆடை - கடலாகிய ஆடையினையும், மலை முலை - மலையாகிய முலையினையும், ஆகத்து ஆரப் பேர்
யாற்று - அம் முலையையுடைய மார்பினிடத்துப் பெரிய யாறாகிய முத்து வடத்தினையும், மாரிக்
கூந்தல் - மேகமாகிய கூந்தலினையும் உடைய, கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை இடமகன்ற
பரப்பினையுடைய நிலமகளின், புதைஇருட் படாஅம் போக
நீக்கி - உடம்பை மறைத்த இருளாகிய போர்வையைப் போகு மாறு நீக்கி, உதய மால் வரை
உச்சித் தோன்றி - பெரிதாகிய உதய கிரியின் உச்சியிலே உதித்து, உலகு விளங்கு அவிர்
ஒளி - உலகம் விளங்குதற்குக் காரணமாகிய ஆதித்தன், மலர்கதிர் பரப்பி - விரிந்த
கிரணங்களைப் பரப்ப ;
பேரியாற்று ஆரம் என மாறுக. விளங்கு
என்பது ஏதுப்பெயர் கொண்டது. அவிர்ஒளி - விளங்கும் ஒளி ; ஆதித்தன். பரப்பி என்பதனைப்
பரப்ப வெனத் திரிக்க. அரசு கெடுத் தலம்வரும் மண் மடந்தை போர்த்த இருளாகிய படாத்தைத்
தன் கதிர்க்கைகளால் நீக்கி என் மேலிற் காதையுடன் தொடர்பு படுத்துரைக்க. 1"மணி
மலைப் பணைத்தோண் மாநில மடந்தை, அணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச், செல்புன் லுழந்த
சேய்வரற் கான்யாற்று" என்றார்
பிறரும்.
[அடி: மலை - பொதியிலும், இமயமும்
; இவற்றைச் சாதியொருமையாற் கூறினார் ; 'பொதியிலு மிமயமும் புணர்முலை யாக' என்றார்
கதையினும். புதைத்தல் - போர்த்தல் ; மலைநாட்டு வழக்கு. வாளாது மண்மடந்தை யென்னாது
கண்ணகன் பரப்பின் மண்மடந்தை யென்று மிகுத்துக் கூறினார், அத்தன்மையாளைப் போர்த்த
நீலப்படாத்தைத் தன் றேசினால் நீக்கிய ஒளி யெனற்கு ; எனவே செம்பியன் மரபுயர்ச்சி
கூறியவா றாயிற்று.]
1. சிறுபாண்.
1--3
|
|
|