பக்கம் எண் :


2. வேட்டுவ வரி


70

ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை



69
உரை
71

        ஐயை - தலைவி, செய்யவள் - திருமகள், வெய்ய வாள் தடக்கைப் பாய்கலைப் பாவை - கொடிய வாளினைப் பெரிய கையின்கண் தாங்கிய தாவும் கலையை ஊர்தியாகவுடைய பெண், பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை - ஆராயும் கலைகளை உணர்ந்த பாவை, பசிய வீரவளையை அணிந்தவள், அரிய அணிகலங்களை அணிந்த பாவைபோல்வாள் ;

        ஐயை என்பதற்கு வென்றி மகள் எனவும், அருங்கலப் பாவை என்பதற்கு இரத்தினப் பாவை எனவும் கூறுவாரு முளர்.