பக்கம் எண் :


12. அழற்படு காதை




10

ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு

கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்


8
உரை
11

       ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - குரவன் கணிவன் அறங்கூறு அவையத்தார் காவிதி மந்திரவோலை எழுதுவார் என்னும் இவரோடு,

       கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் - அரண் மனையிலுள்ளாரும் வளை யணிந்த பணிப்பெண்டிரும், ஒவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - சித்திரத்தொகுதி போன்று உரையாட்டு அடங்கியிருந்த வளவிலே ;

       ஆசான் - புரோகிதன். பெருங்கணி - தலைமை நிமித்திகன். அறக்களத்தந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள் என்ப. பின்னர்,1 "அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி" எனக் கூறுதலும் நோக்கத்தக்கது. காவிதி - வரியிலார் ; அரசிறை வாங்குவோர் ; காவிதி என்பது அரசனாற் கொடுக்கப்படும் ஓர் சிறப்புப் பெயராகலின் அதனைப் பெற்றோரென்க. மந்திரக் கணக்கர் - அமைச்சர் குழுவி னுள் முடியும் முடிபுகளை ஓலையில் எழுதுவார்.


1 சிலப். 28: 222.