10
|
ஆசான் பெருங்கணி அறக்களத்து
அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் |
|
ஆசான்
பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - குரவன் கணிவன்
அறங்கூறு அவையத்தார் காவிதி மந்திரவோலை எழுதுவார் என்னும் இவரோடு,
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
- அரண் மனையிலுள்ளாரும் வளை யணிந்த பணிப்பெண்டிரும், ஒவியச் சுற்றத்து உரை அவிந்து
இருப்ப - சித்திரத்தொகுதி போன்று உரையாட்டு அடங்கியிருந்த வளவிலே ;
ஆசான் - புரோகிதன். பெருங்கணி -
தலைமை நிமித்திகன். அறக்களத்தந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள் என்ப. பின்னர்,1
"அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி" எனக் கூறுதலும் நோக்கத்தக்கது. காவிதி - வரியிலார்
; அரசிறை வாங்குவோர் ; காவிதி என்பது அரசனாற் கொடுக்கப்படும் ஓர் சிறப்புப் பெயராகலின்
அதனைப் பெற்றோரென்க. மந்திரக் கணக்கர் - அமைச்சர் குழுவி னுள் முடியும் முடிபுகளை ஓலையில்
எழுதுவார்.
|
1
சிலப். 28: 222.
|
|
|