15
|
காழோர் வாதுவர் கடுந்தே
ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள |
|
காழோர்
வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய
யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும்
தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய
வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து
நெருங்க ;
காழ்
- குத்துக்கோல். வாதுவர் - வாசிவாரியர். பகை மன்னர் பணிந்து திறை கொணர்ந்து காத்திருக்கும்
வாயிலாகலின், 'கொற்ற வாயில்' என்றார். நெருப்பவித்தற்கு வந்து மிடைந்தன ரென்க
; தாம் விடைகொள்ள எனப் பாடங்கொண்டு அரசனை உட்கொண்டு இவர்கள் நீங்க எனவும் உரைப்ப.
|
|
|