| கனகமாலையார் இலம்பகம் |
1002 |
|
|
|
என்பாளை; மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான் - உலகம் எல்லாம் தன்னிடத்திலே செல்ல நின்ற அரசுரிமையாகிய மகிழ்ச்சியைப் பெற்றவன்போல மகிழ்ந்து கொடுத்தான்.
|
|
(வி - ம்.) அவண் விளங்க - கேமசரி நாணுதலின், அவள் மனை விளங்கியது. மகிழ்ச்சியின் : இன் : ஒப்பு.
|
( 201 ) |
| 1758 |
அவ்வழி யிரண்டு திங்கள் |
|
| |
கழிந்தபி னவளி னீங்கி |
|
| |
யிவ்வழி நாடு காண்பான் |
|
| |
வருதலு மிறைவன் கண்டே |
|
| |
செவ்வழி பாட ராகிச் |
|
| |
சிலைத்தொழில் சிறுவர் கற்ப |
|
| |
மைவழி நெடுங்க ணாளைத் |
|
| |
தந்தனன் மதலை யென்றான். |
|
| |
|
(இ - ள்.) மதலை - குழந்தாய்!; அவ்வழி இரண்டு திங்கள் கழித்தபின் - அங்கே இரண்டு திங்களைப் போக்கிய பிறகு; அவளின் நீக்கி - அவளிடத்தினின்றும் பிரிந்து; நாடு காண்பான் இவ்வழி வருதலும் - நாடுகளைப் பார்க்க இவ்வழியே வருதலும்; இறைவன் கண்டு - இந்நாட்டரசன் என் திறனைப்பார்த்து; சிறுவர் செவ்வழி பாடராகிச் சிலைத்தொழில் கற்ப -அரசன் மக்கள் நல்ல வழிபாடுடையராகி விற்றொழில் கற்ப; மை வழி நெடுங்கணாளைத் தந்தனன் என்றான் - மை வழியும் நீண்ட கண்ணாளாகிய கனகமாலையைக் கொடுத்தான் என்றான்.
|
|
(வி - ம்.) ஏனைப் படைக்கலங்களின் தொழிலும், யானை முதலிய ஏற்றுத் தொழிலும் கற்றாரேனும் அவை கூறாது விற்றொழிலே கூறினார், அதன் சிறப்பு நோக்கி.
|
( 202 ) |
| 1759 |
தானுழந் துற்ற வெல்லாந் |
|
| |
தம்பியை யுணரக் கூறித் |
|
| |
தேனுழந் தரற்றுந் தாரான் |
|
| |
குரவரைச் சிந்தித் தாற்கு |
|
| |
வானிழிந் தாங்குக் கண்ணீல் |
|
| |
மார்பக நனைப்பக் கையா |
|
| |
லூனுமிழ்ந் திலங்கும் வேலா |
|
| |
னொற்றிமற் றிதனைச் சொன்னான். |
|
| |
|
(இ - ள்.) தேன் உழந்து அரற்று தாரான் - வண்டுகள் மலரைக் கிண்டி முரலும் மாலையானாகிய சீவகன்; தான் உழந்து
|