பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1004 

வேறு

1761 தேனிற் பாலெனச் செல்வன் றம்பியோ
டானி யம்பல கழிய வாயிடை
வேனிற் குன்றெனத் தோழர் வெந்துமெய்
யூனி னைகின்றார் செய்வ துன்னினார்.

   (இ - ள்.) தேனில் பால் என - தேனிடத்துப் பால்போல இனிமையாக; செல்வன் தம்பியோடு ஆனியம் பல கழிய - சீவகன் தம்பியுடன் பல பொழுதுகள் கழியாநிற்க; ஆயிடைத் தோழர் - அவ் விராசமா புரத்தே உள்ள தோழர்கள்; வேனில் குன்றென வெந்து - கோடையில் மாலைபோல மனங் கொதித்து; மெய் ஊன் நைகின்றார் செய்வது உன்னினார் - உடம்பில் ஊன் மெலிகின்றவர் மேல் செய்யவேண்டுவதென்னென நினைத்தனர்.

   (வி - ம்.) ஊனின் : இன் : அசை.

   தேனிற் பால் என்றது தேனும் பாலும் கலந்தாற் போன்று என்றவாறு. ஒன்றன் இனிமைக்கு மற்றொன்று ஆக்கமாதல் பற்றி இங்ஙனம் உவமை கூறினர். ஆனியம் - நாள். வேனிற்குன்று - கோடைக் காலத்து மலை. தோழர் - பதுமுகன் முதலியோர்.

( 205 )
1762 நாடு மின்னினி நாங்கள் செய்வதென்
றீடி னாலிருந் தெண்ணி நால்வரு
மாடு மஞ்ஞையஞ் சாயற் றத்தைமெய்
வாட லொன்றிலள் வஞ்சமாங் கொலோ

   (இ - ள்.) நால்வரும் ஈடினால் இருந்து - தோழன்மார்நால் வரும் வருத்தத்தோடேயிருந்து; நாங்கள் செய்வது நாடுமின் இனி என்று எண்ணி - இனி நாம் செய்யுங் காரியத்தை ஆராய்மின் என்று சிந்தித்து; ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய் வாடுகின்றிலள் - ஆடும் மயில் போன்ற அழகிய தோற்றத்தையுடைய தத்தை உடல் மெலிகின்றிலள்; வஞ்சம் ஆம்கொல்? - (ஆதலின்) அவன் மறைந்துறைகின்றனனோ?

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம் : நால்வர் : பதுமுகன், புத்திசேனன், சீதத்தன், தேவதத்தன், கொல். ஐயம். நாங்கள் : கள் : பகுதிப் பொருள் விகுதி.

( 206 )
1763 கள்ள முண்டெனிற் காண்டு நாமென
மௌ்ள வெய்தினார் வினவக் கூறினாள்
வள்ளற் குற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண்மலை வேந்தன் பாவையே.
ஊழ்வினை துரப்ப வோடி
  யொன்றுமூழ்த் தத்தி னுள்ளே
சூழ்குலைப் பெண்ணை நெற்றித்
  தொடுத்ததீங் கனிக ளூழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து
  வெருவரத் தக்க துன்பத்
தாழ்துய ருழப்ப வூணு
  மருநவை நஞ்சு கண்டாய்.