| கனகமாலையார் இலம்பகம் |
1020 |
|
|
|
(இ - ள்.) கந்துக்கடன் என்ற - கந்துக்கடன் என்றழைக்கப்படுகின்றவனும்; நகர்க்கு ஆதி முது நாய்கன் - இராசமாபுரத்திலே முதன்மை பெற்ற முதிய நாய்கனுமாகியவன்; முந்திப் பெறப்பட்ட மகன் - முதலிற் பெற்ற மகன்; மூரிச் சிலைத் தடக்கை - பெருமைமிக்க வில்லேந்திய பெருங்கையையுடைய; சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் - நினைப்பவர்களின் துன்பத்தை நீக்கும் சீவகன் எனப்படுவோன்; என் தோழன் அவனை - என் தோழனாகிய அவனை; அரசன் ஒருநாள் ஒரு தவற்றால் - கட்டியங்காரனாகிய மன்னன் ஒருநாள் அவனுடைய பிழையாலேயே.
|
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.
|
|
கந்துக்கடன் என்ற நாய்கன், நகர்க்கு ஆதிநாய்கன், முதுநாய்கன் எனத் தனித்தனி கூட்டுக. மூரிச்சிலை - பெரிய வில். அவலம் அறுதற்குக் காரணமான சீவகன் என்க. அந்தில் - அவ்விடத்தே.
|
( 241 ) |
| 1798 |
தொடிகடவழ் வீங்குதிர டோளிறுக யாத்துக் | |
| |
கடிகடவழ் குழன்மகளிர் கசிந்துமனங் கரியக் | |
| |
கொடிகடவழ் மாடநகர்க் கொல்லவென மாழ்கி | |
| |
யிடிகடவழ்ந் திட்டபட நாகமென வீழ்ந்தாள். | |
|
|
(இ - ள்.) தொடிகள் தவழ் வீங்குதிரள் தோள் இறுகயாத்து - தொடிகள் தவழ்கின்ற, பருத்துத் திரண்ட, தோள் இறுகப் பிணித்து; கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய - மணமுறும் தேன் பொருந்திய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் கசிந்து கருக; கொடிகள் தவழ் மாடநகர் கொல்ல; கொடிகள் தவழும் மாடங்களையுடைய நகரிலே கொல்லுதற்கு ; என - என்று தேவதத்தன் கூறிய அளவிலே; மாழ்கி - மயங்கி; இடிகள் தவழ்ந்திட்ட படநாகம் என வீழ்ந்தாள் - இடிகள் உடம்பு முழுதும் தவழப்பட்ட படத்தையுடைய நாகம்போல விசயை விழுந்தாள்.
|
|
(வி - ம்.) கொல்லக் கொலைக்களம் குறுகலும் என்றுரைக்கப் புகுகின்றவன், 'கொல்ல' என்ற அளவிலே வீழ்ந்தாள். அரசன் கொல்லும்படி அவன் வென்று கொலைக்களங் குறுகலும் எனப் பொருள் கொள்க'இடிகள் உடம்பெங்குந் தவழ்ந்த நாகம்' - இல்பொருளுவமை. 'மோட்டு முதுநீர்' என்பது தொடங்கிக், 'கொல்ல' என்னும் சொல்வரை தேவதத்தன் கூற்று. ஒரு பெண்ணுயிரைக் காத்தவனைக் கோறல் அறம் அன்மையின், 'ஒரு தவறு' என்பதனை அரசனுடையதாக்குக.
|
|
இங்கும் நச்சினார்க்கினியர், 'யாத்து' என்பதற்கு 'நாய்கன் பிணிக்க' என்றே பொருள் கூறுவர். 'நாய்கன்' என்ற சொல் முற்செய்யுளில் (1797) உள்ளது. தொடிகள் - வீரவளைகள். தவழ்தோள், வீங்குதோள், திரள்தோள் எனத் தனித்தனி கூட்டுக. இவைகள் மூன்றும் வினைத்தொகைகள்.
|
( 242 ) |