பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1029 

1816 பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு
மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா
புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே.

   (இ - ள்.) புகை செய் வேலினீர்! - வெம்மையாற் புகையும் வேலையுடையீர்!; பகைவர் உள்ளமும் - பகைவருடைய நெஞ்சமும்; பாம்பின் படர்ச்சியும் - பாம்பின் போக்கும்; வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும் - வகையுற்ற மேகலை அணிந்த மங்கையரின் உள்ளமும்; மிகை செல் மேகத்து மின்னும் - வானிற் செல்லும் மேகத்திலுள்ள மின்னும்; செம் நில்லலா - செவ்வையாக நில்லா (ஆதலின்); போற்றுபு சென்மின் - பகைவர் உள்ளத்தையும் மகளிர் நெஞ்சையும் அறிந்து ஒழுகுமின்.

   (வி - ம்.) படர்ச்சி - செலவு. மிகை - மேலே; வானிலே என்றவாறுதில்லலா - நில்லா. வேலினீர் : விளி.

( 260 )

நம்பிக்கு இசைய எடுத்து உரைத்து - நம்பிக்குப் பொருந்த முறையாகக் கூறி; ஐயனை அசைவு இன்று என் உழை தம்மின் - இதனால் ஐயன் வருந்தாதபடி அவனை என்னிடம் அழைத்து வம்மின்; எனச் சொன்னாள் - என்றுரைத்தாள்.

   (வி - ம்.) விசயை என்றுலகெலாம் புகழ்பரவுதற்குக் காரணமான வீறு இலேன் என்க. வீறு - ஈண்டு நல்வினை. இனி ”அந்தோ விசயை பட்டன காண்மின்” என உலகெலாம் கூறுதலின் என்பெயர் உலகெலாம் பரத்தற்குக் காரணமாவேனும் வீறு இலேனும் ஆகிய யான் எனினுமாம். பசை - பற்று. என்னுழை - என்பால்.

( 258 )
1815 கோதை வேனம்பிக் கல்லதை யிப்பொருள்
யாதுங் கூறன்மின் யாரையுந் தேறன்மி
னேத மின்னன வின்னண மெய்தலாற்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின்.

   (இ - ள்.) கோதை வேல் நம்பிக்கு அல்லது - மாலையணிந்த வேலையுடைய நம்பிக்கன்றி; இப்பொருள் யாதும் கூறன்மின் - இப்பொருளிற் சிறிதும் பிறர்க்குரையன்மின்; யாரையும் தேறன்மின் - எவரையும் தெளியன்மின்; இன்னன ஏதம் இன்னணம் எய்தலால் - இத் தன்மையவாகிய பிழைகள் நினைவின்றியும் வருதலின்; பேதையாரொடும் பெண்ணொடும் பேசன்மின் - அறிவிலாரொடும் பெண்களுடனும் பேசாதீர்.

   (வி - ம்.) 'இன்னன' என்றது, தான் பிறப்புணர்த்திய அதனை 'இன்னணம்' என்றது தன் நினைவின்றிப் புலம்பலிற் கூறிய அதனை.

( 259 )