| கனகமாலையார் இலம்பகம் |
1030 |
|
|
வேறு
|
| 1817 |
வணக்கருஞ் சிலையி னானை | |
| |
யொருமதி யெல்லை நாளுட் | |
| |
குணத்தொடு மலிந்த பாதங் | |
| |
குறுகயாங் கொணர்ந்த பின்றைப் | |
| |
பணித்ததே செய்து பற்றார் | |
| |
பகைமுத லடர்த்து மென்றார் | |
| |
மணிக்கொடி மாசுண் டன்னாண் | |
| |
மற்றதே துணிமி னென்றாள். | |
|
|
(இ - ள்.) வணக்க அருஞ் சிலையினானை - பிறரால் வணக்குதற்கரிய வில்லையுடைய சீவகனை; ஒருமதி எல்லை நாளுள் - ஒரு திங்கள் எல்லைப் போதிலே; குணத்தொடு மலிந்த பாதம் குறுக - பண்பினாலே நிறைந்த அடிகளின் திருவடியைக் குறுகும்படி; யாம் கொணர்ந்த பின்றை - யாங்கள் அழைத்து வந்த பிறகு, பணித்ததே செய்து - அருளிச் செய்ததையே செய்து; பற்று ஆர் பகைமுதல் அடர்த்தும் என்றார் - தழும்பேறிக் கிடந்த நிறைந்த பகையை முற்படக் கொல்லுவோம் என்றார்; மாசு உண்ட மணிக்கொடி அன்னாள் - அழுக்குண்ட மணிக்கொடி போன்ற விசயையும்; அதே துணிமின் என்றாள் - அதனையே துணிவாகக் கொண்மின் என்றாள்.
|
|
(வி - ம்.) பிறரால் வளைத்தற்கரிய சிலையினையுடையானை என்க. சீவகனை, ஒருமதி - ஒரு திங்கள், குணத்தொடு மலிந்த பாதம் என்புழி முதலின் குணம் சினைமேலேற்றிக் கூறப்பட்டது. நின் பாதம் என்ற படியாம். அடர்த்தும்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று.
|
( 261 ) |
| 1818 |
பொறிதவ நெருங்க நோற்றுப் | |
| |
புகரற நிறைந்த கொள்கைச் | |
| |
செறிதவ விசயை பாதஞ் | |
| |
சென்னியின் வணங்கி மீண்டு | |
| |
வெறிகமழ் சோலை நண்ணி | |
| |
வேண்டிய வடிசில் கைதொட் | |
| |
டெறிபடை யெழுக வென்றார் | |
| |
வளையெழுந் தார்த்த வன்றே. | |
|
|
(இ - ள்.) பொறி தவ நெருங்க நோற்று - ஐம்பொறிகளும் புலன்களில் செல்லும் வேட்கை மிகுதியும் ஒடுங்கும்படி நோற்று; புகர்அற நிறைந்த கொள்கை - குற்றமின்றி நோன்பையுடைய; செறி தவ விசயை பாதம் - (முற்பிறப்பிலே) செறிந்த தவ
|