| கனகமாலையார் இலம்பகம் |
1035 |
|
|
|
வோம் என்றது வாய்மையானன்றிப் பொய்யாக ஆனிரையைக் கொள்வோம் எனினுமாம்.
|
( 269 ) |
| 1826 |
சேட்குலாஞ் சிலையொடு திளைத்த பின்னவர் | |
| |
வாட்கலாம் வலித்தமர் தொடங்கின் வல்லையே | |
| |
மீட்கலாம் விருப்புடைத் தெழுக வென்றுதன் | |
| |
னாட்கெலாஞ் செப்பின னலர்ந்த தாரினான். | |
|
|
(இ - ள்.) சேண் குலாம் சிலையொடு திளைத்தபின் - தொலைவிலே யிருந்து, வளைந்த வில்லுடனே பொருதபின்; அவர் வாள்கலாம் வலித்து அமர் தொடங்கின் - அவர்கள் அணுகி வாட்போரைச் செய்யத் துணிந்து போர் தொடங்கின்; வல்லையே மீட்கலாம் - (நம்படையை ) விரைந்து மீட்கலாம்; விருப்பு உடைத்து - இஃது என் விருப்பமுடையது; எழுக என்று - புறப்படுக என்று; தன் ஆட்கு எலாம் - தன்னை ஒழிந்த மூவருக்கும் படை வீரர்க்கும்; அலர்ந்த தாரினான் செப்பினான் - மலர்ந்த மாலையான் கூறினான்.
|
|
(வி - ம்.) திளைத்தல் - ஈண்டு போர்பொருதல். வாள்கலாம் - வாளாற் செய்யும் போர். வல்லையே - விரைந்து. தாரினான் : பதுமுகன்.
|
( 270 ) |
வேறு
|
| 1827 |
இருங்கடன் மணிநிரை யெய்திநாங் கொண்டபின் | |
| |
னருங்கடி யணிநக ரையனங் கில்லையேற் | |
| |
பெரும்படை தான்வரிற் பின்றிநீங் கிற்பழி | |
| |
தரும்படித் தன்றியுஞ் சாற்றுவல் கேண்மினோ. | |
|
|
(இ - ள்.) இருங்கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின் - பெரிய கடல்போன்ற ஆநிரைகளை அடைந்து நாம் கொண்ட பிறகு; அருங்கடி அணி நகர் அங்கு ஐயன் இல்லையேல் - அரிய காவலையும் அழகினையும் உடைய நகரமாகிய அங்கே நம் சீவகன் இல்லையெனில்; பெரும்படை தான்வரின் - (அதனுடன்) பெரிய படையும் வந்துவிட்டால்; பின்றி நீங்கின் பழிதரும் படித்து - (அஞ்சினாரைப்போல) யாம் மீண்டு போந்தால் தோற்றார்கள் என்று பழிக்கும்படியாயிருக்கும்; அன்றியும் சாற்றுவல் கேண்மின் - அஃதன்றியும் பின்னும் ஒன்று கூறுவேன் கேளுங்கள்.
|
|
(வி - ம்.) இது புத்தி சேனன் கூற்று.
|
|
இருங்கடல் - பெரியகடல்; இஃது ஆனிரைக்குவமை. அணிநகரங்கு என ஒட்டுக. ஐயன் : சீவகன், ஐயன் இல்லையாகப் படை வருதல் ஒருதலை; அதுவரின் என்றவாறு. பின்றி - மீண்டு. அச்செயல் பழிதரும் படித்து என்க.
|
( 271 ) |