| கனகமாலையார் இலம்பகம் | 
1041  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) வனை கலத் திகிரியும் - மண் கலன்களை வரையும் திகிரியும்; வாழ் உயிர்மேல் செலும் கனைகடுங் கதழ் பரிக் கால சக்கரமும்போல - வாழும் உயிரை வவ்வச் செல்லும் மிகவுங் கடிதாகிய மிக்க செலவினையுடைய கூற்றுவன் ஆழியும் போல; வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் இனையவை - தொழிற்குத் தக்க வட்டமும் வீதியும் பத்தியுமாகிய இத் தன்மையவற்றை; ஏம் உற இமைப்பினின் இயற்றினான் - தப்பாதபடியே ஒரு நொடியிலே நடத்தினான். 
 | 
| 
    (வி - ம்.) கலம் வனைதிகிரி என்க. வாழுயிர் : வினைத்தொகை. கதழ்பரி - விரைந்த செலவினையுடைய. வட்டம், வீதி, பத்தி என்பன யானையின் செலவு வகை. 
 | 
( 283 ) | 
|  1840 | 
ஒருவனே களிறுமொன் றோருநூ றாயிரந் |   |  
|   | 
திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக் |   |  
|   | 
குரியவன் னிவனலா லுலகினில் லிலனென |   |  
|   | 
வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதெ. |   |  
|   | 
விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை |   |  
|   | 
யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை |   |  
|   | 
கடுகின காலிய லிவுளி காண்டலு |   |  
|   | 
முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஒருவனே களிறும் ஒன்று - நடத்துவோனும் ஒருவனே, களிறும் ஒன்றேயாக இருக்கவும்; திசையெலாம் நூறாயிரம் திரிவவே போன்றன - ஏறினபடி திசையெல்லாம் எண் இறந்த யானை திரிவனபோலே இருந்தன; -குஞ்சரக்கு உரியவன் உலகினில் இவன் அலால் இலன் என - (ஆதலால்) யானையேற்றத்திற்குரியவன் உலகிலே இவன் அல்லது மற்றொருவன் இலன் என்று கூறி; அரிது உணர் வேத்தவை அமைக என்றது - அரிதென்று உணர்ந்த அரசவை அமைக என விலக்கியது. 
 | 
| 
    (வி - ம்.) ஓரும், மற்று : அசைகள். 
 | 
| 
    களிறும் ஒன்று அதனை ஊருவோனும் ஒருவனே என்க. நூறாயிரம் என்றது மிகுதிக்கோர் எண் கூறியவாறு. குஞ்சரக்கு - குஞ்சரத்திற்கு. சாரியையின்றி உருபு புணர்ந்தது. 
 | 
( 284 ) | 
|  1841 | 
வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு |   |  
|   | 
முள்ளுணர் குஞ்சரம் ஓய்யென நிற்றலு |   |  
|   | 
மௌ்ளரும் மிருமணி கிணினென விசைத்தன |   |  
|   | 
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே. |   |  
|   | 
அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர் |   |  
|   | 
வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும் |   |  
|   | 
விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா |   |  
|   | 
லுளைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வள் உகிர் நுதியினால் - தோட்டி நுனியென்னும் உகிர் நுனியினால்; வரி நுதல் ஊறுத்தலும் - வரியையுடைய நெற்றியிலே அழுத்தின அளவில்; உள் உணர் குஞ்சரம் - இவன் மனம் உணர்ந்த யானை; ஒய்யென நிற்றலும் - கடுக நின்ற அளவிலே; எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன - குற்றமற்ற இரண்டு மணிகளும் கிணின் என்று ஒலித்தன; 
 |