பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1042 

வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்து கைவிதிர்த்தது - வெள்ளம் போன்ற தன்மையுடைய மிகுதியையுடய மக்கள் திரள் வியப்புற்றுக் கைவிதிர்த்தது.

   (வி - ம்.) ஓடுகின்ற விசையாலே ஒலி அடங்கின மணிகள் நின்ற பொழுது ஒலித்தன.

   நுதி - முனை. வரிநுதல் - வரிகளையுடைய நெற்றி. ஓய்யென; விரைவுக் குறிப்பு. கிணின்; ஓசைக் குறிப்பு.

( 285 )
1842 என்மன நின்மன மென்றிரண் டில்லையாற்
றன்மனத் துளபொரு டான்றனக் குரைப்பதொத்
துன்மன மென்மன மென்பதொத் திழைத்ததா
னன்மனக் குஞ்சர நம்பியோ டென்மரும்.
 

   (இ - ள்.) தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து - தன் மனத்திற் பொருளைத் தான் தனக்கு உரைக்கும் தன்மையை ஒத்து ஏவல் செய்தலாலே; உன் மனம் என் மனம் என்பது - உன் மனமே என்மனம் என்று கூறுவதாகிய; நன்மனக் குஞ்சரம் நம்பியோடு ஒத்து இழைத்தது - நல்ல மனமுடைய குஞ்சரம் நம்பியின் மனமுடன் ஒன்றித் தொழிலைச் செய்தது; (ஆதலால் அக் குஞ்சரத்திற்கும் நம்பிக்கும்) என்மனம் நின்மனம் என்று இரண்டு இல்லை என்மரும் - என்மனம் நின்மனம் என இரண்டில்லையாக இருந்தது என்பாரும்.

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.

( 286 )
1843 தேவனே மகனலன் செல்வன்மற் றென்மரும்
பாவையே நோற்றனள் பாரின்மே லென்மருங்
கோவனும் மக்களுங் குளிர்ந்துதோ ணோக்கினா
ரோவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே.
 

   (இ - ள்.) செல்வன் தேவனே, மகன் அலன் என்மரும் - இச் செல்வன் தேவனே, மகன் அல்லன் என்பாரும் : பாரின் மேல் பாவையே நோற்றனள் என்மரும் - உலகில் கனகமாலையே (இவனை அடைய) தவம்புரிந்தனள் என்பாரும் (ஆகி) : ஓ என ஓசை போய் வையகத்து உயர்ந்தது - ஓ என்ற ஓசை சென்று உலகில் மேம்பட்டது. (அதனால்) கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார் - அரசனும் அவன் மக்களும் மகிழ்ந்து தம் தோளை நோக்கினார்கள்.

   (வி - ம்.) என்பார் என்பர் எனத் திரிந்தது. உண்மரும் தின்மரும் (பதிற் -24) என்றாற்போல; இனி, ஆயினார் என வினை கோடலின்; மாரீறு விகாரமாய் நின்ற தெனின், தனக்குரிய எதிர்காலம் உணர்த்தாமை உணர்க.

( 287 )