பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1048 

1854 பொருகய லுகளிப் பாயப்
  பூஞ்சிறைக் குமரி யன்னங்
குருகினோ டிரியச் செந்நெற்
  கொழுங்கதிர் குவளை யெற்ற
முருகுவிண் டிரியத் தீந்தேன்
  முழங்குநீர்க் கழனி நன்னா
டெரியுமிழ்ந் திலங்கும் வேலோ
  யேமமாங் கதம தென்றான்.

   (இ - ள்.) எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் - தீயைச் சொறிந்து விளங்கும் வேலனே!; பொருகயல் உகளிப் பாய- பொருகின்ற கயல்மீன்கள் பிறழ்ந்து பாய்தலினாலே; பூஞ்சிறைக் குமரி அன்னம் - குருகினோடு இரிய - (அஞ்சிய) அழகிய சிறகினையுடைய அன்னமும் நாரையும் ஓடுதலின்; செந்நெல் கொழுங்கதிர் குவளை எற்ற - (அவற்றின் மெய் தீண்டி) வளவிய செந்நெற் கதிர் குவளைமேல் எற்றுதலின்; முருகு விண்டு இரிய - நறுமணம் விட்டு உலவ; தீ தேன் முழங்கு நீர்க் கழனி நன்னாடு - இனிய தேன் கலந்து முழங்கும் நீரையுடைய கழனிகள் சூழ்ந்த அழகிய நாடு; ஏமமாங் கதமது என்றான் - ஏமாங்கதம் என்றான்.

   (வி - ம்.) உகளுதல் - பிறழ்தல், பூஞ்சிறை - அழகிய சிறகு. குமரியன்னம் - இளைய அனைப் பெடை. குருகு - நாரை முருகு - மணம், எரி - தீ, ஏமாங்கதம் ஏமமாங்கதம் என விரிந்தது. அது : பகுதிப்பொருளது.

( 298 )
1855 பூந்துகிற் கொடுத்த தீந்தே
  னகிற்புகை பொன்ன னார்தங்
கூந்தலிற் குளித்த வண்டு
  கொப்புளித் திட்ட வாச
மாந்தர்மேற் றவழ்ந்து மாட
  மிருள்படப் புதையுஞ் செல்வத்
தேந்துபொன் னிஞ்சி மூதூ
  ரிராசமா புரம தென்றான்.

   (இ - ள்.) பூதுகில் கொடுத்த தீ தேன் அகிற்புகை - அழகிய ஆடைக்கு ஊட்டிய இனிய தேன் கலந்த அகிலின் புகையும்; பொன் அனார்தம் கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்திட்ட வாசம் - திருவனைய மகளிரின் கூந்தலிலே முழுகிய வண்டு கொப்புளித்திட்ட மணமுறு தேனும்; மாந்தர் மேல் தவழ்ந்து - மக்களின்மேல் தவழ; மாடம் இருள்பட -