கனகமாலையார் இலம்பகம் |
1052 |
|
|
செலுத்தும்படி ஏறி; அமர்ந்து; கூன் நிறக் குழவித் திங்கள் குளிர்கதிர் ஆரம் மார்பின் - வளைந்த ஒளிபொருந்திய பிறைத்திங்கள்போலக் குளிர்ந்த முத்துமாலை அணிந்த மார்பினையும்; தேன் நிறம் கொண்ட கண்ணி - தேனையுடைய ஒளிகொண்ட மாலையினையும் உடைய; சீவக குமரன் சொன்னான் - சீவகன் ஒருமொழி உரைத்தான்.
|
(வி - ம்.) பானிறக்கவரி - பால்போலும் நிறமுடைய கவரி, திண்டேர் உறப்பண்ணி என இயைக்க. தான்; அசை, தம்பி ; நந்தட்டன்.
|
( 304 ) |
1861 |
மன்னவ னிரைகொண் டாரை | |
|
வளநகர்த் தந்து மன்னன் | |
|
பொன்னவிர் கழலிற் றங்கள் | |
|
புனைமுடி யிடுவி யேனே | |
|
லின்னிசை யுலகந் தன்னு | |
|
ளென்பெயர் சேற லின்றாய்க் | |
|
கன்னிய மகளிர் நெஞ்சிற் | |
|
காமம்போற் கரக்க வென்றான். | |
|
(இ - ள்.) மன்னவன் நிரை கொண்டாரை வளநகர்த் தந்து - அரசனுடைய நிரையைப் பற்றியவரை வளமிகு இந்நகரிற் கொணர்ந்து; மன்னன் பொன் அவிர் கழலில் தங்கள் புனைமுடி இடுவியேனேல் - அரசனுடைய பொன் விளங்குங் கழலணிந்த திருவடியிலே அவர்களுடைய அணிமுடியைப் பொருத்திலேனெனின்; இன் இசை உலகந் தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய் - இனிய புகழை உடைய உலகிலே என் பெயர் செல்லுதல் இன்றி; கன்னி மகளிர் நெஞ்சில் காமம் போற்கெடுக என்றான் - கன்னியராகிய பெண்களின் உள்ளத்திலே உண்டான காமம் வெளிவராது அழிதல்போல அழிக என்றான்.
|
(வி - ம்.) கன்னிய; அ : அசை. அரசனைக் காணாமலே இவ் வஞ்சினங் கூறினான்.
|
( 305 ) |
1862 |
பார்மலி பரவைத் தானைப் | |
|
பரப்பிடைப் பறப்ப தேபோ | |
|
னீர்மலி கடாத்த கொண்மூ | |
|
நெற்றிமேன் மின்னி னொய்தாத் | |
|
தார்மலி மார்பன் றிண்டோ் | |
|
தோன்றலுந் தறுகண் மைந்தன் | |
|
சீர்மலி பகழி யேந்திப் | |
|
பதுமுகன் சிலைதொட் டானே. | |
|