கனகமாலையார் இலம்பகம் |
1064 |
|
|
வேறு
|
1882 |
எங்கோமற் றென்றிறநீர் கேட்டதென் | |
|
றாற்கெரி மணிப்பூட் | |
|
செங்கோன் மணிநெடுந்தோ்ச் செல்வன் | |
|
காதற் பெருந்தேவி | |
|
தங்காத் தவவுரு வந்தாங்கித் | |
|
தண்டா ரணியத்து | |
|
ளங்காத் திருந்தாளைத் தலைப்பட் | |
|
டைய வறிந்தோமே. | |
|
(இ - ள்.) என்திறம் நீர் கேட்டது எங்கோ என்றாற்கு - நீர் என் திறனைக் கேட்டது எங்கேயோ என்று வினவினாற்கு ; ஐய! - ஐயனே!; எரிமணிப்பூண் செங்கோல் மணிநெடுந்தேர்ச் செல்வன் - ஒளியுடைய மணிக்கலன்களும் செங்கோலும் மணி நெடுந்தேரும் உடைய சச்சந்த மன்னனின்; காதல் பெருந்தேவி - அன்புடைய பட்டத்தரசி விசயை ; தங்காத் தவ உருவம் தாங்கி - தனக்கேலாத தவ உருவத்தைச் சுமந்து; தண்டாரணியத்துள் - தண்டாரணியம் என்னும் வனத்திலே; அங்காத்து இருந்தாளை - மனத்தே நீ வாழ வேண்டுமென்ற ஆசை பிணிக்கப் பட்டுத் துறவோருறையும் அவ்விடத்தே இருந்தவளை; தலைப் பட்டு அறிந்தோம் - எதிர்ப்பட்டு அறிந்தோம்.
|
(வி - ம்.) 'ஆத்த பொறிய '(நாலடி. 290) 'ஆத்த அறிவினர்' [நாலடி. 151] என்றாற்போல 'ஆத்து' என்றார். இனி 'உளங்காத்து' என்றும் பாடமோதுப.
|
பொள்ளெனக் கூறின் அவன் துன்பம் எல்லையற்றதாம் என நின்தாய் என்னாது ஏதிலாட்டிபோலச் செல்வன் காதற் பெருந்தேவி என்றார். செல்வன் என்றது சச்சந்தனை. தண்டாரணியம் - தண்டகாரணியம்.
|
( 326 ) |
1883 |
என்னேமற் றென்னேநீர் மொழிந்ததென் | |
|
னேயென விரும்பி | |
|
முன்னேமொ ழிந்தாற்போன் முறைநின் | |
|
றெல்லா முடன்மொழிய | |
|
மன்னாஞ் சிந்துவபோன் மலர்ந்த | |
|
செந்தா மரைக்கண்ணீர் | |
|
பொன்னார மார்பின்மேற் பொழியப் | |
|
புன்க ணுற்றானே. | |
|
(இ - ள்.) விரும்பி முற்று நீர் மொழிந்தது என்னே என்னே என்னே என - சீவகன் விரும்பி, 'இனி நீர் கூறியது என்னே!
|