பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1071 

உலகம் எல்லாம் தழுவினீர் - உலகம் முழுதும் கைக்கெண்டீராவீர்; தாமரை உறையும் செய்யாள் விழுவினார் தம்மைப் புல்லாள் - தாமரையில் வாழும் திருமகள் காவாது வழுவினவரைச் சேராள்; (ஆகையால், காவாது வழுவாதீர்); நும் கண்ணி வாழ்க! - நும் கண்ணி வாழ்வதாக.

   (வி - ம்.) மாது ஒ : அசைகள், 'நும் கண்ணி வாழ்க!' என்பதனைக் கழுவினீர் என்பதன்பின் சேர்ப்பர் நச்சினார்க்கினியர்.

   சீவகன் தன் பிற்ப்புண்மையைப் பண்டே உணர்ந்திருந்தானாயினும் அவனும் இதுகாறும் மறைவாகவே அதனைப் போற்றி வந்தானாகலின், இப்போது நந்தட்டன் அனைவரும் உணர்ந்தமை கருதி விழுமணி மாசு மூழ்கிக்கிடந்தது இவ்வுலகம் விற்பக் கழுவினீர் என அவன்பிறப்பு வெளிப்பாட்டைத் தோழர் மேலதாக்கியே உரைக்கின்றான். சிக்க - அகப்பட. செய்யாள் - திருமகள்.

( 2 )
1891 தொழுததங் கையி னுள்ளுந்
  துறுமுடி யகத்துஞ் சோர
வழுதகண் ணீரி னுள்ளு
  மணிகலத் தகத்து மாய்ந்து
பழுதுகண் ணரிந்து கொல்லும்
  படையுட னெடுங்கும் பற்றா
தொழிகயார் கண்ணுந் தேற்றந்
  தெளிகுற்றார் விளிகுற் றாரே.

   (இ - ள்.) தொழுத தம் கையினுள்ளும் - தொழுத தம் கையிலும்; துறுமுடி அகத்தும் - மயிர் நெருங்கிய முடியிலும்; சோர அழுத கண்ணீரின் உள்ளும் - ஒழுக அழுத கண்ணீரிலும்; அணிகலத்தகத்தும் - அணிகலன்களிலும்; கொல்லும் படை உடன் ஒடுங்கும் - கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; ஆய்ந்து - அதனை ஆராய்ந்து; பழுது கண்ணரிந்து - அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி; யார்கண்ணும் தேற்றம் பற்றாது ஒழிக - யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக; தெளிகுற்றார் விளி குற்றாரே - அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர்.

   (வி - ம்.) அரசர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்துப் பகைவர் நட்புடையார்போல் அழுக்கண்ணீரும் கொலைசூழ்தலின் கண்ணீரிலும் படையொடுங்கிற்றாம். 'ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து' (குறள்-828) என்றார் தேவரும்.

( 3 )
1892 தோய்தகை மகளிர்த் தோயின்
  மெய்யணி நீக்கித் தூய்நீ
ராய்முது மகளிர் தம்மா
  லரிறபத் திமிரி யாட்டி