பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1075 

”உடையும் அடிசிலுடம் உருமண்ணு வாவிற்குக்
கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி
அகன்மடி யவன்றான் அமர்ந்து கொடுப்ப”

   என்றார் கதையினும் (3 - 9 : 128 - 30.)

( 8 )

வேறு

1897 சிறுகண்யா னையினினஞ் சோ்ந்துசே வகங்கொளத்
துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மக
நறியசந் தின்றுணி நாறவெந் தனகள்கொண்
டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே.

   (இ - ள்.) சிறுகண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள - சிறிய கண்களையுடைய யானைத்திரள் கூடித் துயில் கோடலின்; மந்திமக உணர்கலா துறுகல் என்று துள்ளி - குரங்கின் குட்டிகள் யானையென்றுணராமல் பெரிய கல் என்று நினைத்து மேலே துள்ளி; நறிய சந்தின் துணி வெந்தனகள் கொண்டு நாற எறிய - நல்ல சந்தனக் கட்டைகள் வெந்தனவற்றைக் கொண்டு மணம் வீசுமாறு ஒன்றையொன்று எறிய; மயிர்க் கவரி மாஎள்கி இரியும் - மயிரையுடைய கவரிமா துணுக்கென அச்சுற்று ஓடும்.

   (வி - ம்.) 'துள்ளும்' என்பது பாடமாயின், 'துள்ளும் மகவு' என்க.

   சேவகம் : ஆகுபெயர். துறுகல் - குண்டுக்கல். மந்திமக துறுகல் என்றுணர்கலா துள்ளி என மாறுக. மக - குட்டி. சந்தின் துணி - சந்தனக்குறடு. வெந்தனகள் என்புழிக் கள் விகுதிமேல் விகுதி. 'மந்திம்மக, வெள்கிம் மயிர்' என்பவற்றுள் மகரவொற்று வண்ணநோக்கி விரிந்தது.

( 9 )
1898 புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி
யகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன
கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே.

   (இ - ள்.) பவழமே அனையன பன்மயிர்ப் பேரெலி - பவழமே போன்றனவாகிய மிகுதியான மயிரையுடைய பேரெலிகள்; புகழ்வரைச் சென்னிமேல் - புகழப்படுகின்ற மலையுச்சியின் கண் வாழும்; பூசையின் பெரியன - பூனையினும் பெரியவனாய்; அகழும் இங்குலிகம் - அகழும் சாதிலிங்கம்; அஞ்சனவரை சொரிவன - அஞ்சன வரையின் தாழ்வரையிலே வீழ்கின்றவை; கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்த - கவள முண்ணும் - யானையின் நெற்றியிலே தவழும் பட்டுக் கச்சைப் போன்றன.