பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1079 

வேறு

1906 பூத்தகி றவழும் போர்வை
  பூசுசாந் தாற்றி பொன்னூற்
கோத்துநீர் பிலிற்றுங் காந்தங்
  குங்கும வைரப் பொற்கோய்
சாத்துறி பவழக் கன்னல்
  சந்தன வால வட்ட
நீத்தவ ரிடத்து நாற்றி
  நிழன்மணி யுலகஞ் செய்தார்.

   (இ - ள்.) பூத்து அகில் தவபம் போர்வை - பொலிவு பெற்று அகிற்புகை தவழும் போர்வையையும்; பூசு சாந்து ஆற்றி - மேலே பூசிய சந்தனத்தை ஆற்றும் சிற்றால வட்டத்தையும்; பொன் நூல் - தலையிற் கட்டும் பொன்னூலையும்; நீர் கோத்துப் பிலிற்றும் காந்தம் - நீரை விடாமல் துளிக்கும் சந்திரகாந்தக் கல்லையும்; குங்கும வைரப் பொன்கோய் - குங்குமம் வைக்கும் வைர மிழைத்த பொற்சிமிழையும்; சாத்துறி - பரணிக் கூட்டையும்; பவழக் கன்னல் - பவழக் கரகத்தையும்; சந்தன ஆல வட்டம் - சந்தன மரத்தாற் செய்த பேரால வட்டத்தையும்; நீத்தவர் இடத்து நாற்றி - தாபதரின் பள்ளியிலே தூக்கி; நிழல் மணி உலகம் செய்தார் - ஒளியையுடைய அழகிய வானுல காக்கினர்.

   (வி - ம்.) அகில் : ஆகுபெயர். பூத்தல் - பொலிவுறுதல். சாந்தாற்றி -சிற்றாலவட்டம். நீர் பிலிற்றும் - நீரைக் காலும். காந்தம் - சந்திரகாந்தம். கோய் - சிமிழ். சாத்துறி - பரணிக்கூடு. கன்னல் - கரகம். நீத்தவர் - தாபதர்.

( 18 )
1907 நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங்
கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார்
பித்தல ராயிற் பேய்க ளென்றவாற் பேச லாமோ.

   (இ - ள்.) நித்தில முலையினர்தம் நெடுங்கணால் நோக்கப் பெற்றும் - முத்தணிந்த முலையினருடைய பெருங்கண்களாற் பார்க்கப் பெற்றும் : கைத்தலம் தீண்டப் பெற்றும் - கைகளால் தொடுதல் பெற்றும்; கனிந்தன - கனியாதன கனிந்தன; மலர்ந்த - பூவாதன பூத்தன; காண்க - அவற்றைக் காண்பீராக!; வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை யென்பார் - மங்கையர் கையை வைத்து மலர் கொய்தற்கேற்ற அளவிலே தாழ்ந்து கொடுப்பதுஞ் செய்தனவாகிய மரங்கட்கு உயிர் இல்லை