பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1084 

அழுந்த வேண்டா; இக்கவலை களைக என்றான் - இனி இத்துன்பத்தைக் கைவிடுக என்றான்.

   (வி - ம்.) குரைய : அசை. கொற்றம் - தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்தியது. நட்புடையவர் : சச்சந்தனுடைய நண்பர்கள்; சீவகன் தோழருடைய தந்தையர்.

   'உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன்; உயிரை நீத்தேனும் அல்லேன்' என்று கருதி, 'மரத்தினேன்' என்றான். 'இடையன் எறிந்த மரம்' (பழ. 314) என்றார் பிறரும்.

( 26 )
1915 யானல னௌவை யாவாள்
  சுநந்தையே யையற் கென்றுங்
கோனலன் றந்தை கந்துக்
  கடனெனக் குணத்தின் மிக்க
பானிலத் துறையுந் தீந்தே
  னனையவா யமிர்த மூற
மானலங் கொண்ட நோக்கி
  மகன்மன மகிழ்ச் சொன்னாள்.

   (இ - ள்.) ஐயற்கு ஒளவை யாவாள் சுநந்தையே, யான் அலன் - ஐயனுக்குத் தாயாவாள் சுநந்தையே, யானல்லேன்; தந்தை கந்துக் கடன், கோன் அலன் - தந்தையாவான் கந்துக் கடனே, அரசனல்லன்; என - என்று; பால்நிலத்து உறையும் தீதேன் அனையவாய் அமிர்தம் ஊற - பாலிடத்தே தங்கும் இனிய தேனைப் போன்றனவாய் இனிமையூறும்படி; குணத்தின் மிக்க மான் நலம் கொண்ட நோக்கி - குணத்திற் சிறந்தவளும், மானின் அழகைக்கொண்ட நோக்கத்தை யுடையவளுமான விசயை; மகன் மனம் மகிழச் சொன்னாள் - சீவகன் மனங்களிக்கக் கூறினான்.

   (வி - ம்.) இருமுது குரவர்க்குந் துன்பஞ் செய்தே னென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவர் என்றாள், ஐயன் : முன்னிலைப் படர்க்கை.

( 27 )
1916 எனக்குயிர்ச் சிறுவ னாவா
  னந்தனே யைய னல்லை
வனப்புடைக் குமர னிங்கே
  வருகென மருங்கு சோ்த்திப்
புனக்கொடி மாலையோடு
  பூங்குழ றிருத்திப் போற்றா
ரினத்திடை யேற னானுக்
  கின்னளி விருந்து செய்தாள்.