விமலையார் இலம்பகம் |
1100 |
|
|
1948 |
மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோ | |
மன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோ | |
வென்ன னோவறி யோமுரை யீரெனாப் | |
பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார். | |
|
(இ - ள்.) மின்னின் நீள் கடம்பின் நெடுவேள் கொலோ? - மேனியின் ஒளியாலே நீண்ட கடப்பந்தாரானாகிய முருகவேளோ?; மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ? - பொருநதிய ஐங்கணையையும் நீண்ட கருப்பு வில்லையும் உடைய காமவேளோ?; என்னனோ? - யாரோ?; அறியோம், உரையீர் எனா - அறிகிலோம், நீர் அறிந்தால் உரைப்பீராக என்று; பொன் அம்கொம்பு அனையார் புலம்பு எய்தினார் - அழகிய பொற்கொடி போன்ற மகளிர் வருந்தினர்.
|
(வி - ம்.) நெடுவேள் - முருகன். மைந்தன் : காமன். என்னனோ - யாவனோ. புலம்பு - வருத்தம்.
|
( 60 ) |
1949 |
விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறி | |
பண்ண லைக்கழி மீன்கவர் புள்ளென | |
வண்ண வார்குழ லேழையர் வாணெடுங் | |
கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே. | |
|
(இ - ள்.) விண் அகத்து இளையான் அன்ன - வானகத்திலுள்ள முருகவேளைப் போன்ற; மெய்ப் பொறி அண்ணலை - உத்தம இலக்கணங்களையுடைய சீவகனை; கழிமீன் கவர் புள் என - கழியிலுள்ள மீனைக் கவர நோக்கும் மீன்கொத்திப் பறவை போல; வண்ணவார் குழல் ஏழையர் - அழகிய நீண்ட குழலையுடைய மங்கையரின்; வாள் நெடுங் கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்ற - வாளனைய நீண்ட கண்களெல்லாம் கவர்ந்து உண்கின்றன ஆயின.
|
(வி - ம்.) இது தொழில் உவமம்.
|
இளையான் : முருகன். மெய்ப்பொறி : உடலின்கண் உத்தம விலக்கணங்கள். அண்ணலை : சீவகனை. ஏழையர் - மகளிர். உண்டிடுகின்ற: ஒருசொல்.
|
( 61 ) |
வேறு
|
1950 |
புலாத்தலைத் திகழும் வைவேற் | |
பூங்கழற் காலி னானை | |
நிலாத்தலைத் திகழும் பைம்பூ | |
ணிழன்மணி வடத்தோ டேந்திக் | |
|