பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1127 

1995 டோளி ரண்டு மன்ன தோழர்
தோன்ற லைப்பு ணாந்தபின்
றாளி ரண்டு மேத்தி நின்று
தைய னாமம் வேண்டினார்.

   (இ - ள்.) வாள் இரண்டு மாறு வைத்த போல் மழைக்கண் மாதரார் - இரண்டு வாட்களை எதிராக வைத்தன போலக் குளிர்ந்த கண்களையுடைய (காவிலுள்ள) மங்கையர்; நாள் இரண்டு சென்ற என்று நைய - நாட்கள் இரண்டு சென்றன என்று வருந்த; மொய் கொள் காவினுள் - மரம் நெருங்கிய பொழிலில்; தோளிரண்டும் அன்ன தோழர் - சீவகனுடைய இரு தோளையும் போன்ற தோழர்; தோன்றலைப் புணர்ந்தபின் - சீவகனைக் கூடியபின்னர்; தாளிரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் - இரண்டு தாள்களையும் போற்றி நின்று அவன் மணந்த தையலின் பெயரைக் கூறுக என்றனர்.

   (வி - ம்.) மாதரார் : கூடவந்த போக மாதர்கள்.

   இனி, விமலையிடத்து ஒருநாளைக் கூட்டமே கொள்ளின், மாதரார் இருநாள் நைய, இவர்கள் தையல் யாரென வினவிப் பின்னும் சுரமஞ்சரி இடம் விடுத்ததாகக் கொள்க. எனவே விமலையிடம் ஒரு நாளும் சுரமஞ்சரியிடம் ஒருநாளும் கணக்காயின.

( 1 )
1996 பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்
வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென்
றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுத
லூடி னும்பு ணாந்த தொத்தி னியவளு ளாளரோ.

   (இ - ள்.) பாடு வண்டு இருந்த அன்ன பல்கலை அகல் அல்குல் - முரலும் வண்டுகள் தங்கினாற்போலப் பல மணிகளையுடைய மேகலையையுடைய அகன்ற அல்குலையும்; வீடு பெற்ற வரும் வீழும் வெம்முலை - துறந்தவரும் இல்லறம் புக விழையும் வெம்முலைகளையும்; ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன - ஆடுவதற்கணி செயப் பெற்றாலன்ன சிறப்பினையுடைய அரம்பையைப் போன்ற; வாணுதல் விமலை என்று - வாணுதலாள் விமலை என்று பெயர் கூறப்பட்டு; ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள் - ஊடினாலும் கூடினாற் போன்ற இனியவள் இருக்கின்றனள்.

   (வி - ம்.) ஊடல் கடிதின் தீர்தலிற் கூடல் போன்றது. 'வண்டிருப்பன்ன பல்காழ் அல்குல்' (பொரு-39) என்றார் பிறரும். வீடு பெற்றவர் - இல்வாழ்வினின்று விடுதலை பெற்றவர் : துறவிகள். பெற்ற வரும் - என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்புப் பொருளது. ஆடுவான் : வான் விகுதிபெற்ற வினையெச்சம்.

( 2 )