பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1146 

செவ்வாய்த் தேன்கொள் அமிர்து ஆர்ந்து - இனிய கரும்பை மென்றாலனைய இனிய பவளமனைய செவ்வாயின் இனிமை கொண்ட அமிர்தத்தைப் பருகி, செழுந்தார் குழையச் சேர்ந்தார் - வளவிய தார் வாடும்படி அணைந்தனர்.

   (வி - ம்.) பூஞ்சதங்கை மாலை என்பதனை ஒருபுறமாலை என்பர் நச்சினார்க்கினியர். குஞ்சி - ஆடவர் தலைமயிர் - விரை - நறுமணச் சாந்து. கரும்பு மென்றனைய அமிர்து, வாய் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக.

( 40 )
2035 பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான்
முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான்
மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றாற்
கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார்.

   (இ - ள்.) பொன் அறையுள் இன் அமளிப் பூவணையின் மேலான் - பொன்னாலான அறையிலே இனிய படுக்கையில் மலரணையின்மேலிருந்த சீவகன்; முன்னிய தன் மன்றலது முந்துஉற முடிப்பான் - தான் நினைத்திருந்த தன் மணத்தினை விரைந்து முடிக்க வேண்டி; மன்னும் ஒரு கீதம் மதுரம்பட முரன்றாற்கு - நிலைபெற்றதொரு இசையை இனிமையுறப் பாடினாற்கு; இளையாரும் இன்னமிர்தம் ஆக அதுகேட்டார் - இள மங்கையரும் இனிய அமிர்தமாக அதனைக் கேட்டனர்.

   (வி - ம்.) நான்காம் உருபிற்கு இவர் கேட்டது கொடைப் பொருட்டாம்.

   மேலான் : வினையாலணையும் பெயர்; சீவகன். முன்னிய - கருதிய மன்றல் - திருமணம், ஈண்டு யாழோர் மணம். மன்றலது என்புழி, அது பகுதிப்பொருளது. கீதம் - இசை.

( 41 )

வேறு

2036 மன்ம தன்ம ணிக்கு ரன்ம
  ருட்டு மென்று மால்கொள்வா
ரின்ன தின்றி யக்க ரின்னி
  யக்க வந்த தென்றுதம்
பின்னு முன்னு நோக்கு வார்
  பேது சால வெய்துவார்
கன்னி தன்ம னத்தி ழைத்த
  காளை நாமம் வாழ்த்துவார்.

   (இ - ள்.) மன்மதன் மணிக்குரல் மருட்டும் என்று மால் கொள்ளார் - காமனது அழகிய குரலே என்றும், அக் குரலை