(வி - ம்.) உலகில் இல்லாததற்கு உடம்படலாம். அஃது ஒருவனாற் காட்ட முடியாதாகலின். 'ஒருபொருளிருசொற் பிரிவில் வரையார்' (தொல் எச்ச. 94) என்னுஞ் சூத்திரத்து, வரையார் என்றதனால், 'பொற்பே' என்னும் ஏகாரவீற்றுப் பெயர் வேறும் ஒரு பொருள் தந்து நிற்றலின், பேய் என்று யகரவீறுமாய் நின்றது. இதற்கு யகர ஒற்று விகாரத்தால் தொக்கதாம். 'அருங்கழி காதம் அகலும் என்றூழென்றலந்து கண்ணீர் - வருங்கழி காதல் வனசங்கள்' (சிற். 190) என்ற இடத்து, 'அலர்ந்து' என்பது, 'அலந்து' என்று விகாரப்பட்டு நின்றாற் போல.
|
( 52 ) |