பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1158 

2055 ஆடவ ரிரிய வேகி
  யஞ்சொல்லார் சூழக் காமன்
மாடத்து ளிழிந்து மற்றவ்
  வள்ளலை மறைய வைத்துச்
சூடமை மாலை சாந்தம்
  விளக்கொடு தூப மேந்திச்
சேடியர் தொழுது நிற்பத்
  திருமகள் பரவு மன்றே.

   (இ - ள்.) ஆடவர் இரிய அம்சொலார் சூழ ஏகி - (அரசன் ஆணையால்) ஆடவர் விலக, அழகிய மொழியாரான பெண்கள் சூழச் சென்று; மாடத்துள் இழிந்து - காமன் கோட்டத்திலே இறங்கி; அவ் வள்ளலை மறைய வைத்து - சீவகனை மறைய வைத்து; சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி - சூடுதற்கான மாலையும் சாந்தமும். விளக்கும் தூபமும் எடுத்துக் கொண்டு; சேடியர் தொழுது நிற்ப - பணிமகளிர் காமனைத் தொழுதவாறு நிற்க; திருமகள் பரவும் - திருமகள் அனையாள் பரவுகின்றாள்.

   (வி - ம்.) ஆடவர் அரசன் ஆணையால் விலக என்க. காமன் மாடம் - காமன் கோயில், (கோட்டம்). வள்ளல்; சீவகன், சேடியர் - பணிமகளிர். திருமகள் : உவமவாகுபெயர்; சுரமஞ்சரி. அன்று, ஏ : அசைகள்.

( 61 )
2056 பொன்னிலஞ் சென்னி புல்ல
  விடமுழந் தாளை யூன்றி
மின்னவிர் மாலை மென்பூங்
  குழல்வலத் தோளின் வீழக்
கன்னியங் கமுகின் கண்போற்
  கலனணி யெருத்தங் கோட்டித்
தன்னிரு கையுங் கூப்பித்
  தையலீ துரைக்கு மன்றே.

   (இ - ள்.) இட முழந்தாளை ஊன்றி - இட முழந்தாளை ஊன்றி; மின் அவிர் மாலை மென் பூங்குழல் வலத்தோளில் வீழ - ஒளிவீசும் மாலையும் மென்மையான மலர்க்குழலும் வலத் தோளிலே விழ; கன்னிஅம் கமுகின் கண்போல் கலன் அணி எருத்தம் கோட்டி - ஈனாத இளங்கமுகின் கண்போலக் கலனை அணிந்த கழுத்தை வலத்தே சாய்த்து; பொன்நிலம் சென்னி புல்ல - பொன் தரையிலே முடிபொருந்த (வணங்கியெழுந்து);