பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1163 

2064 குங்குமங் குயின்ற கொம்மைக்
  குவிமுலை குளிர்ப்பத் தைவந்
தங்கலுழ் மேனி யல்குற்
  காசுடன் றிருத்தி யம்பொற்
பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்த
  பூந்துக ளவித்து மாதர்
கொங்கலர் கோதை சூட்டிக்
  குழனலந் திருத்தி னானே.

   (இ - ள்.) குங்குமம் குயின்ற கொம்மைக் குவிமுலை குளிர்ப்பத் தைவந்து - (வேட்கை தீர நுகராமையிற் பிறந்த வெப்பம் நீங்க) சுரமஞ்சரியின் குங்குமம் பூசிய பருத்த குவிந்த முலைகள் குளிரத் தடவி; அம் கலுழ் மேனி அல்குல் காசு உடன் திருத்தி - அழகு வழியும் மேனியில் உள்ள அணியையும் அல்குலிலுள்ள மணிமேகலையின் காசுகளையும் சேரத் திருத்தி; பொங்கு அம் பொன் பூஞ்சிலம்பில் போர்த்த பூந்துகள் அவித்து - ஒலிக்கும் அழகிய பொற் சிலம்பிலே போர்த்த மகரந்தத் தூளைத் துடைத்து; மாதர் கொங்கு அலர் கோதை சூட்டி - அவளுடைய தேனலரும் மாலையை அணிந்து; சூழல் நலம் திருத்தினான் - குழலையும் நலமுறத் திருத்தினான்.

   (வி - ம்.) அவ்விடம் மலர் பரப்பிக் கிடத்தலின் பூந்துகள் கூறினார்.

( 70 )

வேறு

2065 வானார்கமழ் மதுவுஞ் சாந்து மேந்தி
  மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந்
தேனார்பூங் கோதாய் நினக்குக் காமன்
  சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான்
றானாரப் பண்ணித் தடறு நீக்கித்
  தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற
வூனார்ந்த வோரிணை யம்புந் தந்தா
  னென்னை யுளனாக வேண்டி னானே.

   (இ - ள்.) வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி - வானில் நிறைந்து கமழும் மதுவையும் சாந்தையும் ஏந்தி; மதுத் துளித்து - அம்மதுவைத் துளித்தலின்; மூசும் வண்டும் சுரும்பும் தேன் ஆர் பூங்கோதாய்! - மொய்க்கின்ற வண்டுகளும் சுரும்புகளும் தேனினமும் நுகரும் மலர் மாலையாய்!; நினக்குக் காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலித் தந்தான் - நினக்குக்