| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1167 |
|
|
|
உவமையில் தோற்கும் புருவத்தினாளிடம் மணத்திறத்தைக் கூறுகின்றார்.
|
|
(வி - ம்.) திருவில் - வானவில். கற்பான் : வினையெச்சம். துவலை - துளி. உருவிற்றாய் - வடிவுடையதாய். பொருவிற்றா நம்பி - பொரு விற்று ஆம் நம்பி எனக் கண்ணழித்துக் கொள்க.
|
( 76 ) |
| 2071 |
கனைகடலமுதுந் தேனுங் கலந்துகொண் டெழுதப் பட்ட | |
புனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவை | |
நனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும் | |
புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார். | |
|
|
(இ - ள்.) கனை கடல் அமுதும் தேனும் கலந்து கொண்டு எழுதப்பட்ட - ஒலி கடலில் அமுதையும் தேனையும் ஒன்றாகக் கலந்துகொண்டு வரையப்பட்ட; புனை கொடி - ஒப்பனை செய்த கொடி; பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை - இரண்டு முகைகளைப் பூத்த தன்மை போல் உள்ள முலைகளைப் பொறாத இடையையுடைய பாவையாலாகிய; நனைகுடைந்து உண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும் - தேனைக் குடைந்து பருகித் தம் வயிற்றை நிறைத்து அழகிய நீலமணி போலும் வண்டுகள் பாடுகின்ற; புனைகடி மாலை மாதர் திறத்து - அணிந்த மணமுறும் மாலையையுடைய சுரமஞ்சரியின் சுற்றத்தாரிடம்; இது மொழிந்து விட்டார் - இம் மணத்தைச் சொல்லி விடுத்தனர்.
|
|
(வி - ம்.) திறம் - சுற்றம்.
|
|
”எழுதப்பட்ட நனையையுடையதொரு கொடி; கொடி, அமுதையும் தேனையும் தன்னுள்ளே கலந்துகொண்டு இரண்டு முகையைப் பூத்த தன்மைபோலிருக்கின்ற முலைகளைப் பொறாத நுசுப்பினையுடைய பாவைபோலு மாதர், வண்டு குடைந்து உண்டு தன்வயிற்றை நிறைத்துப் பாடும் மாலையையுடைய மாதர் என்க” என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 77 ) |
| 2072 |
ஐயற்கென் றுரைத்த மாற்றங் | |
கேட்டலு மலங்க னாய்கன் | |
வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல் | |
விழுங்கலோ டுமிழ்த றேற்றான் | |
செய்வதெ னோற்றி லாதே | |
னோற்றிலா டிறத்தி னென்று | |
மையல்கொண் டிருப்ப வப்பாற் | |
குமரிதன் மதியிற் சூழ்ந்தாள். | |
|
|
(இ - ள்.) ஐயற்கு என்று உரைத்த மாற்றம் - சீவகற்கு இவளைத் தரவேண்டும் என்று கூறிய மொழியை; அலங்கல்
|