பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1170 

2076 கெண்டையுஞ் சிலையுந் திங்க
  ளிளமையுங் கிடந்து தேங்கொ
டொண்டையங் கனியு முத்துந்
  தொழதக வணிந்து தூங்குங்
குண்டல முடைய திங்க
  ளிதுவெனு முகத்தி தாதை
வண்புகழ்க் குபேர தத்தன்
  கேட்டனன் மனைவி சொன்னாள்.

   (இ - ள்.) கெண்டையும் சிலையும் இளமைத் திங்களும் கிடந்து - கயல் மீனும் வில்லும் பிறைத்திங்களும் கிடந்து; தேன்கொள் தொண்டைஅம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து - இனிமை கொண்ட கொவ்வைக் கனியையும் முத்தையும் நன்கு மதிப்பு அணிந்து; தூங்கும் குண்டலம் உடைய திங்கள் இது எனும் - அசையுங் குண்டலத்தையுடைய முழுமதி இதுவென்கிற; முகத்தி தாதை கேட்டனன் - முகமுடைய சுரமஞ்சரியின் தந்தை என்னென்று கேட்டனன்; மனைவி சொன்னாள் - மனைவியாகிய சுமதி இதனைக் கூறினள்.

   (வி - ம்.) இங்குக் கூறிய முழுமதி இல்பொருளுவமை.

   கெண்டை கண்களுக்கும் சிலை புருவங்களுக்கும் பிறை நெற்றிக்கும் தொண்டைக்கனி உதடுகட்கும் முத்து பற்களுக்கும் உவமைகள். நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நின்றாள் என்க.

( 82 )
2077 செருவிளைத் தனலும் வேலோய்
  சிறுமுதுக் குறைவி தானே
பெருவளைப் பிட்டுக் காத்த
  கற்பிது போலு மையன்
கரிவிளைத் தாய்ந்த சுண்ணம்
  வாட்டின னென்று கண்டாய்
திருவிளை தேம்பெய் மாரி
  பாற்கடற் பெய்த தென்றாள்.

   (இ - ள்.) செருவிளைத்து அனலும் வேலோய்! - போரை விளைத்துக் கனலும் வேலுடையாய்; சிறுமுதுக் குறைவிதானே பெருவளைப் பிட்டுக் காத்த கற்பு இது - சிறுவயதிலே பேரறிவு பெற்ற சுரமஞ்சரிதானே பெரிய வேலியிட்டுக் காத்த கற்பாகிய இது; ஐயன் கரிவிளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று போலும் - சீவகன் சான்று காட்டி ஆராய்ந்த சுண்ணத்தைத் தீதெனக் காட்டினானென்று கருதிப்போலும்; என்று கண்டாய் -