|
(இ - ள்.) மல்லல்அம் கங்கைபோலும் பலர் முயங்கு ஆர மார்பின் - வளமிகு கங்கைபோலப் பலரும் பலமுகமாக முயங்கும் மார்பினால்; புல்லன்மின், போமின், வேண்டா என்று - இனித் தழுவற்க, செல்லுமின், தீண்ட வேண்டா என்று கூறி; அவள் புலந்து நீங்க - அவள் ஊடி நீங்கி நிற்க; முல்லை அம் கோதை! ஒன்றும் பிழைப்பிலேன், நீ முனியல் என்று - முல்லை மலர்க்கோதையே! யான் ஏதும் பிழை செய்திலேன், நீ முனியாதே என்று; அல்லல் உற்று - வருத்தமுற்று; அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டான் - செந்நிறம் பொருந்திய சிற்றடியை வணங்கினான்.
|