| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1177 |
|
|
|
நச்சினார்க்கினியர் முற்செய்யுட்களிற் பளிக்குச் சுவரும் நிழலும் அமைத்துக் கொண்டதற்குத் தக, ஈண்டு, 'எழுதிய' என்பதற்கு 'ஒரு படத்திலே எழுத வேண்டி' என்று கூறுவர். இவ்வாறே தம் விடாப்பிடியைக் காட்டுவது அவர் வழக்கம்.
|
( 93 ) |
| 2088 |
அலங்கறா தவிழ வஞ்செஞ் | |
சீறடி யணிந்த வம்பூஞ் | |
சிலம்பின்மேற் சென்னி சோ்த்திச் | |
சிறியவர் செய்த தீமை | |
புலம்பலர் பொறுப்ப ரன்றே | |
பெரியவ ரென்று கூறி | |
யிலங்குவேற் கண்ணி யூட | |
லிளையவ னீக்கி னானே. | |
|
|
(இ - ள்.) இளையவன் - சீவகன்; இலங்குவேல் கண்ணி ஊடல் - விளங்கும் வேலனைய கண்ணியின் ஊடலை; சிறியவர் செய்த தீமை பெரியவர் புலம்பலர் பொறுப்பர் அன்றே என்று கூறி - சிறியோர் செய்த பிழையைப் பெரியோர் வெறாராய்ப் பொறுப்பர் அல்லரோ என்று கூறி; அலங்கல் தாது அவிழ - மாலையின் மகரந்தம் சிந்த; அம் செஞ்சீறடி அணிந்த அம்பூஞ் சிலம்பின்மேற் சென்னி சேர்த்தி - அழகிய சிவந்த சிற்றடியில் - அணிந்த அழகிய சிலம்பின்மேல் முடியைச் சேர்த்து; நீக்கினான் - அவளுடலை நீக்கினான்.
|
|
(வி - ம்.) 'அலங்கல் தாது சிலம்பின்மேல் அவிழ' என இயைப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
”சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே” என வரும் வெற்றிவேற்கையும் காண்க.
|
( 94 ) |
| 2089 |
யாழ்கொன்ற கிளவி யாட | |
னழிழ்துறழ் புலவி நீக்கிக் | |
காழின்றிக் கனிந்த காமக் | |
கொழுங்கனி நுகர்ந்து காதற் | |
றாழ்கின்ற தாம மார்பன் | |
றையலோ டாடி விள்ளா | |
னூழ்சென்ற மதியம் வெய்யோ | |
னொட்டியொன் றாய தொத்தான். | |
|
|
(இ - ள்.) காதல் தாழ்கின்ற தாம மார்பன் - காதலால் தங்குகின்ற சீவகன்; யாழ் கொன்ற கிளவியாள் தன் - யாழை வென்ற மொழியாளின்; அமிழ்து உறழ் புலவி நீக்கி - அமிர்தை
|