பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1179 

2091 கடிப்பிணை காது சோ்த்திச்
  சிகழிகை காத நாறத்
தொடுத்தலர் மாலை சூட்டிக்
  கிம்புரி முத்த மென்றோ
ளடுத்தணிந் தாகஞ் சாந்தி
  னணிபெற வெழுதி யல்கு
லுடுத்தபொற் கலாபந் தைவந்
  தொளிவளை திருத்தி னானே.

   (இ - ள்.) கடிப்பினை காது சேர்த்தி - கடிப்பிணை என்னும் அணியைக் காதில் அணிந்து; சிகழிகை காதம் நாற - மயிர் முடியின் கண் மணம் காதவழி நாறுமாறு; தொடுத்து அலர்மாலை சூட்டி தொடுக்கப்பட்டு அலர்ந்த மலர் மாலையை அணிந்து; கிம்புரி முத்தம் மென் தோள் அடுத்து அணிந்து ; கிம்புரி வடிவம் உள்ள முத்துமாலையை மெல்லிய தோளிலே அணிந்து ; ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - மார்பைச் சந்தனத்தாலே அழகுற எழுதி; அல்குல் உடுத்த பொன் கலாபம் தைவந்து - அல்குலிலே அணிந்திருந்த பொன்மேகலையைத் தடவி; ஒளிவளை திருத்தினான் - ஒளிபொருந்திய வளையைத் திருந்த அணிந்தான்.

   (வி - ம்.) கடிப்பு இணை எனக் கண்ணழித்துக் கொள்க. கடிப்பு - ஒருவகைச் செவியணிகலன். சிகழிகை - முடி. முத்தம் - முத்தமாலை. பொற்கலாபம் - பொன்னாலியன்ற மேகலை. தைவந்து - தடவி.

( 97 )
2092 இலங்குவெள் ளருவிக் குன்றத்
  தெழுந்ததண் டகரச் செந்தீ
நலங்கிள ரகிலுந் தேனுங்
  கட்டியு நன்கு கூட்டிப்
புலம்பற வளர்த்த வம்மென்
  பூம்புகை யமளி யங்கண்
விலங்கர சனைய காளை
  வெள்வளைக் கிதனைச் சொன்னான்.

   (இ - ள்.) இலங்கு வெள் அருவிக் குன்றத்து - விளங்கும் வெள்ளருவி வீழுங் குன்றிலே; எழுந்த தண் தகரச் செந்நீ - தோன்றிய தண்ணிய தகரவிறகின் செந்தீயிலே; நலம்கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி - அழகு விளங்கும் அகிலும் தேனும் நேர்கட்டியும் நன்றாகக் கூட்டி; புலம்பு அற வளர்த்த அம்மென் பூம்புகை அமளி அங்கண் - குற்றமின்றி வளர்த்த புகையினையுடைய அமளிக்கண்ணே; விலங்கரசு