பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1183 

2098 செங்கயன் மழைக்கட் செவ்வாய்த்
  தத்தையு மகிழ்ந்து தீஞ்சொ
லெங்கையைச் சென்று காண்மி
  னடிகளென் றிரந்து கூற
மங்கல வகையிற் சோ்ந்து
  மதுத்துளி யறாத மாலை
கொங்கலர் கண்ணி சோ்த்திக்
  குங்கும மெழுதி னானே.

   (இ - ள்.) செங்கயல் மழைக்கண் செவ்வாய்த் தத்தையும் மகிழ்ந்து - செங்கயல் போலும் தண்ணிய கண்களையும் செவ்வாயையும் உடைய தத்தை (இவனைக்கண்டு) மகிழ்ந்து; அடிகள்! - அடிகளே!; தீசொல் எங்கையைச் சென்று காண்மின் என்று இரந்து கூற - இனிய மொழியையுடைய என் தங்கையைச் சென்று காண்மின் என்று வேண்ட; சேர்ந்து - அவனும் அடைந்து; மங்கல வகையில் - மங்கல முறைமையால்; மதுத்துளி அறாத மாலை கொங்கு அலர் கண்ணி சேர்த்தி - தேன்துளி நீங்காத மாலையையும் மணம் கமழும் கண்ணியையும் முதலில் அணிந்து; குங்குமம் எழுதினான் - குங்குமமும் அணிந்தான்.

   (வி - ம்.) சுதஞ்சணன் பன்னிருமதியின் என்றதனைத் தத்தை உணர்தலால் தனக்குக் கூட்டமின்மை உணர்தலானும், அவள் வருத்த மிகுதியானும் இங்ஙனம் இரந்து கூறினாள். குணமாலை, கணவன் வருதலின், மங்கல அணிக்கு உடம்பட்டாள். எனினும் கூட்டத்திற்கு உடம்படாமற் கூறுவது அடுத்த செய்யுளில் விளங்கும்.

( 104 )
2099 தீவினை யுடைய வென்னைத்
  தீண்டன்மி னடிகள் வேண்டா
பாவியே னென்று நொந்து
  பரிந்தழு துருகி நையக்
காவியங் கண்ணி யொன்றுங்
  கவலல்யா னுய்ந்த தெல்லா
நாவியே நாறு மேனி
  நங்கைநின் றவத்தி னென்றான்.

   (இ - ள்.) தீவினை உடைய என்னை அடிகள்! தீண்டன்மின்! வேண்டா - தீவினை பொருந்திய என்னை அடிகளே தீண்டாதீர்! தீண்ட வேண்டா!; பாவியேன் - ஏனெனில் நான் பாவியேன்; என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய - என்றுரைத்து வருந்தி அன்புற்று அழுது உருகி நையாநிற்க;