| 
    (வி - ம்.) 'பின்னாள்' என்று ஈண்டுக் கூறலின், 'அன்றைப் பகலே வந்தடைவன்' (சீவக. 1932) என்றல் ஆகாதென்றுணர்க. மற்றும், நச்சினார்க்கினியர் கூற்றுப்போல, 'விமலை மணம்' ஒருநாளினும். 'சுரமஞ்சரி மணம்' ஒரு நாளினும் முடியாமல் நான்குநாள் வரையாயிருக்க வேண்டும் என்றும் உணர்தல்வேண்டும். சுரமஞ்சரியின் மனையில் மணத்திற்கு ஓரிரவு தங்கினதாக உணரப்படுதலானும், நச்சினார்க்கினியர் உரையின் வண்ணமே விமலையின் மனையிலே இருநாள் தங்கினதாக உணர்வதாலும் என்க. 
 | 
( 107 ) |