| மண்மகள் இலம்பகம் |
1188 |
|
|
|
பின்னர்ச் சீவகன் முதலியோர்க்கும் கட்டியங்காரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கட்டியங்காரன் படைஞர் சீவகன் படைக்குத் தோற்றனர் மாண்டனர்: அஞ்சி இரியல் போயினர். சீவகன் கட்டியங்காரனையும் அவன் மக்களையும் அப்போர்க்களத்தே கொன்று நூழிலாட்டினன். இச் செய்தி கேட்டு விசயை மகிழ்ந்தனள்; உலகம் பாராட்டிப் புகழ்ந்தது.
|
| 2102 |
குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க் | |
குவிமுலைப் படர்மருப் பெருமை | |
நடந்தவா யெல்லா நறுமலர் மரையி | |
னாகிலைச் சொரிந்தவந் தீம்பா | |
றடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப் | |
பார்ப்பின மோம்புதண் மருத | |
மடங்கல்போற் றிறலார் மாமணி கறங்க | |
வளவயற் புள்ளெனக் கழிந்தார். | |
|
|
(இ - ள்.) குடம்புரை செருத்தல் - குடம் போன்ற மடியையும்; குவளைமேய் கயவாய் - குவளை மலரை மேயும் பெரிய வாயையும்; குவிமுலை - குவிந்த முலையையும்; படர் மருப்பு - படர்ந்த கொம்புகளையும் உடைய; எருமை - எருமையானது, நடந்த வாய் எல்லாம் - சென்ற இடமெங்கும்; நறுமலர் மரையின் நாகு இலை சொரிந்த அம்தீ பால் - நல்ல மலரையுடைய தாமரையின் இளைய இலையிலே சொரிந்த அழகிய இனிய பால்; தடம் சிறை அன்னம் குரு கொடு நாரைப் பார்ப்பினம் ஓம்பு தண் மருதம் - பெரிய சிறகுகளையுடைய அன்னமும் குருகும் நாரையுமாகிய பார்ப்பின் திரளை வளர்க்கின்ற தண்ணிய மருத நிலத்தை; மாமணி கறங்க - குதிரைகளின் கழுத்திற் கட்டிய கிண்கிணி முதலியனவும் யானையின் பக்கமணிகளும் ஒலித்தலாலே; வளவயல் புள்எழ - வளமிகுங் கழனியில் அமர்ந்திருந்த பறவைகள் எழுந்தோட; மடங்கல் போல் திறலார் கழிந்தார் - சிங்கம் போன்ற வலியினார் கடந்தனர்.
|
|
(வி - ம்.) அன்னம் முதலியவற்றின் பார்ப்புக்கள் பாலுண்டல் நிலப்பண்பு.
|
|
புரை : உவமவுருபு. செருத்தல் - மடி. கயவாய் - பெரிய வாய். நடந்தவாய் - நடந்த இடம். மரை - தாமரை; முதற்குறை. நாகிலை - இளமையுடைய இலை. பால் : எழுவாய் ஓம்பும் - பாதுகாக்கும் மடங்கல் - சிங்கம். மாமணி. குதிரைக்குக் கட்டிய மணி. கழிதல் புள்ளெழுதற்குக் காரணம் என்க. குருகு - கொக்கு. பார்ப்புஇனம் - பறவைக் குஞ்சுகளின் கூட்டம் மடங்கல் - சிங்கம். தீம்பால் பார்ப்பினம் ஓம்பும் தண்மருதம் எனக் கூட்டுக.
|
( 1 ) |