| மண்மகள் இலம்பகம் |
1189 |
|
|
| 2103 |
புரிவளை யலறிப் பூசலிட் டீன்ற | |
பொழிகதிர் நிலத்தில் முழக்கி | |
வரிவளை சூழும் வலம்புரி யினத்துட் | |
சலஞ்சல மேய்வன நோக்கி | |
யரிதுண ரன்னம் பெடையெனத் தழுவி | |
யன்மையி னலமர லெய்தித் | |
திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கி | |
நெய்தலுங் கைவலத் தொழிந்தார். | |
|
|
(இ - ள்.) புரிவளை அலறிப் பூசல் இட்டு ஈன்ற - முறுக்குடைய சங்குகள் சூல்முதிர்ச்சியால் நொந்து முழங்கிப் பெற்ற; பொழிகதிர் நித்திலம் உழக்கி - பெய்யும் ஒளியையுடைய முத்துக்களைக் கலக்கி; வரிவளை சூழும் வலம்புரி இனத்துள் - சங்குகள் சூழத்திரியும் வலம்புரியின் திரளிலே; சலஞ்சலம் மேய்வன நோக்கி - சலஞ்சலங்கள் மேய்வனவற்றைப் பார்த்து; அரிது உணர் அன்னம் பெடையெனத் தழுவி - அரியதை உணரவல்ல அன்னமானது தன் பெடையென்று தழுவி; அன்மையின் அலமரல் எய்தி - அல்லாமையின் மனக்குழப்பம் அடைந்து - திரிதரும் நோக்கம் தீது இலார் நோக்கி - மறித்துப் போகின்ற நோக்கத்தைத் தீமையிலாதார் தாம் பார்த்து; கைவலத்து நெய்தலும் ஒழிந்தார் - ஒழுக்கத்திறனுள்ள நெய்தலையுங் கடந்தனர்.
|
|
(வி - ம்.) தீது - ஈண்டு வேட்கை என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
புரிவளை - முறுக்குடைய சங்கு, நித்திலம் - முத்து, வலம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழச் செல்வது சலஞ்சலம் என்னும் சிறந்த சங்கு என்பது தோன்ற வலம்புரி இனத்துட் சலஞ்சலம் என்றார். பாலையும் நீரையும் பிரித்துணரவல்ல என்பார் அரிதுணர் அன்னம் என்றார். அன்மையின் - அல்லாமையால். அலமரல் - சுழற்சி. தீதிலார் - சீவகன் முதலியோர்.
|
( 2 ) |
| 2104 |
கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங் | |
கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச் | |
சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச் | |
செம்பொறி வண்டவற் றயலே | |
நாட்டிளம் படியார் நகைமுகம் பருகு | |
நல்லவர் போன்மலர் பருகு | |
மோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கான | |
முருகுவந் தெதிர்கொள நடந்தார். | |
|
|
(இ - ள்.) சேடு இளங் கொன்றைத் திருநிழல் - உயர்ந்த இளமை பொருந்திய கொன்றை மரத்தின் அழகிய நிழலிலே;
|