| மண்மகள் இலம்பகம் |
1199 |
|
|
|
(வி - ம்.) குடை முதலியவற்றின் இருளுமாம்.
|
|
ஆடன் மகளிர் - விறலியர். கலை - மேகலை. ஆவணவீதி - கடைத்தெரு. உக்கவை - சிந்தியவை.
|
( 17 ) |
| 2119 |
கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக் | |
காதன் மகளிரு மைந்தருங் காணிய | |
வீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த் | |
தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே. | |
|
|
(இ - ள்.) கொடுங்குழைக் காதல் மகளிரும் மைந்தரும் காணிய - (சீவகனிடம் அன்புடைய) குழையணிந்த மகளிரும் மைந்தரும் அவனைக் காணும் பொருட்டு; கோதையும் தாரும் பிணங்க - கூந்தல் மாலையும் மார்பின் மாலையும் பிணங்கும்படி : வீதியும் மேலும் மிடைந்து - தெருவிலும் மாடங்களின் மேலும் நெருங்கி நிற்றலின்; மிடைமலர்த் தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்தது - நெருங்க வீழ்ந்த மலர்களின் மகரந்தம் படிந்து எங்கும் அணையெனப் பொலிவுற்றது.
|
|
(வி - ம்.) கோதை - ஈண்டு மகளிர் அணிந்த மாலையினையும் - தார், மைந்தர் அணிந்த மாலையினையும் குறித்தன. காணிய - காண. மேல் - மேல்வீடு. தாது - பூந்துகள், தவிசு - இருக்கை.
|
( 18 ) |
| 2120 |
மானக் கவரி மணிவண் டகற்றவங் | |
கானை யெருத்தத் தமா குமரனிற் | |
சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந் | |
தேனை யவர மெடுத்துரைக் கின்றார். | |
|
|
(இ - ள்.) அங்கு - அத் தெருவிலே; ஆனை எருத்தத்து - யானையின் பிடரியிலே; அமர குமரனின் - இந்திரன் மகனைப் போல அமர்ந்து; மானக்கவரி மணிவண்டு அகற்ற - சிறந்த கவரிகள் வண்டுகளை ஓட்ட; சேனைக் கடலிடை - படைத்திரளின் நடுவே; செல்வனைக் கண்டு உவந்து சீவகனைக் கண்டு மகிழ்ந்து; ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார் எல்லோரும் எடுத்துப் புகல்கின்றனர்.
|
|
(வி - ம்.) மானக்கவரி - ”மயிர் நீப்பின் வாழா”க் கவரிமானின் மயிர் : ஆகுபெயர். ஆனை - யானை. எருத்தம் - பிடரி. செல்வன் : சீவகன்.
|
( 19 ) |
| 2121 |
தேமல ரங்கட் டிருவே புகுதக | |
மாமலர்க் கோதை மணாளன் புகுதக | |
காமன் புகுதக காளை புகுதக | |
நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக. | |
|