| மண்மகள் இலம்பகம் |
1200 |
|
|
|
(இ - ள்.) தேன்மலர் அம்கண் திருவே! புகுதக! - தேனையுடைய மலரில் வாழும் திருவே! புகுக!; மாமலர்க் கோதை மணாளன் புகுதக! - உயர்ந்த பூங்கோதையாளின் மணாளனே ! புகுக!; காமன் புகுதக - காமனே! புகுக!; காளை புகுதக - காளையே! புகுக!; நாம எழில் விஞ்சை நம்பி புகுதக! - அச்சுறுத்தும் அழகினையுடைய வித்தியாதர மகனே புகுக!
|
|
(வி - ம்.) 'திருவே! என்றது உவப்பினால் வந்த பால் வழுவமைதி. மாமலர்க்கோதை : தந்தை : இலக்கணையுமாம்; திருமகளுமாம். தத்தையை மணந்ததனால் 'விஞ்சை நம்பி' ஆயினன்.
|
|
புகுதக : ஒரு கொல் விழுக்காடு ; புகுதுக : என்றவாறு - திரு, மணாளன், காமன்! காளை நம்பி ! என்பன விளிகள்.
|
( 20 ) |
| 2122 |
மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக | |
வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக | |
வென்றோன் புகுதக வீரன் புகுதக | |
வென்றே நகர மெதிர்கொண் டதவே. | |
|
|
(இ - ள்.) மின்தோய் வரைகொன்ற வேலோன் புகுதக! - மின்னையுடைய முகில் தங்கும் மலையைப் பிளந்த வேலேந்திய முருகனே! புகுக!; இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக! - இனிய தேன் மணக்குந் தாரையுடைய இயக்கனே! புகுக!; வென்றோன்! புகுதக! - வென்றியுடையவனே! புகுக. வீரன்! புகுதக! - வீரனே! புகுக!; என்று - என்று கூறியவாறு; நகரம் எதிர்கொண்டது - நகரம் வரவேற்றது.
|
|
(வி - ம்.) புகுதக : ஒருசொல் நீர்மைத்து.
|
|
வரைகொன்ற வேலோன் : முருகன். இயக்கன் - தேவரின் ஒரு வகையினன். வென்றோன் : வினையாலணையும் பெயர். நகரம் : ஆகுபெயா
|
( 21 ) |
| 2123 |
இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங் | |
கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித் | |
துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய் | |
வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார். | |
|
|
(இ - ள்.) எச்சாரும் - எப்பக்கத்தினும்; இடி நறுஞ் சுண்ணம் சிதறி - இடித்த நல்ல சுண்ணத்தைத் தூவி; கடிகமழ் மாலையும் கண்ணியும் சிந்தி - மணங்கமழும் மாலையும் கண்ணியும் சிதறி; துடி அடு நுண் இடைத் தொண்டை அம் செவ்வாய்வடி அடு கண்ணியர் - துடியை வென்ற நுண்ணிடையையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயையும் மாவடுவை வென்ற
|