| மண்மகள் இலம்பகம் |
1215 |
|
|
|
(வி - ம்.) நட்பாய்ப் போதுதலை, மதியாற் சூழும் சூழ்ச்சி என்றனர்.
|
|
நகை - ஈண்டுச் சினம்பற்றி எழுந்தது. கட்டியங்காரன் பேதைமை பற்றியுமாம். 'கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்' என்னுந் திருக்குறளையும் ஈண்டு நினைக.
|
( 47 ) |
| 2149 |
கள்ளத்தா னம்மைக் கொல்லக் | |
கருதினா னாமுந் தன்னைக் | |
கள்ளத்தா லுயிரை யுண்ணக் | |
கருதினே மிதனை யாரு | |
முள்ளத்தா லுமிழ வேண்டா | |
வுறுபடை வந்து கூட | |
வள்ளுவார் முரச மூதூ | |
ரறைகென வருளி னானே. | |
|
|
(இ - ள்.) கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான் - கட்டியங்காரன் நம்மை வஞ்சகமாகக் கொல்ல நினைத்தான்; நாமும் தன்னைக் கள்ளத்தால் உயிரை உண்ணக் கருதினேம் - நாமும் அவனை வஞ்சகத்தால் உயிரை வாங்க நினைத்தோம்; இதனை யாரும் உள்ளத்தால் உமிழ வேண்டா - இதனை எவரும் உள்ளத்தினின்றும் வெளியிட வேண்டா; மூதூர் உறுபடை வந்து கூட - பழம்பதியிலே மிகுதியான படைகள் வந்து கூடுமாறு; வள்ளுவார் முரசம் அறைக என அருளினான் - வள்ளுவர்கள் முரசு அறைக என்று வேந்தன் அருளிச் செய்தான்.
|
|
(வி - ம்.) வள்ளுவார்; பெயர்த்திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர். உள்ளத்தாற்பகைமைக் கருத்தை உமிழ வேண்டா என்றதனால் நட்பென முரசறைந்து வெளியிட்டுக் கூறும்படி மொழிந்தானாயிற்று.
|
( 48 ) |
| 2150 |
கட்டியங் கார னோடு | |
காவல னொருவ னானான் | |
விட்டுநீர் நெல்லும் பொன்னும் | |
வழங்குமின் விளைவ கூறி | |
னொட்டல னிறைவன் சொன்னீர் | |
நாநும வல்ல வென்னக் | |
கொட்டினான் றடங்கண் வள்வார்க் | |
குளிறிடி முரச மன்றே. | |
|
|
(இ - ள்.) காவலன் கட்டியங்காரனோடு ஒருவன் ஆனான் - நம் வேந்தன் பகைமையை விட்டுக் கட்டியங்காரனோடு உறவாகினான்; விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் - (எனவே
|