பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1217 

2152 கூற்றுடன் றனைய தானை
  கொழுநில நெளிய வீண்டிப்
பாற்கடற் பரப்பின் வெள்வாட்
  சுடரொளி பரந்த வன்றே.

   (இ - ள்.) ஏற்றுஉரி போர்த்த வள்வார் இடிமுரசு அறைந்த பின்நாள் - விடையின் தோலைப் போர்த்த இறுகிய வாரையுடைய, இடியென முழங்கும் முரசினை அறைந்த மற்றைநாள்; காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப - காற்றினால் மோதப்படும் கடலிலிருந்து கிடைத்த சங்கும் முழவமும் முரசும் ஒலிக்க; கூற்று உடன்ற அனைய தானை கொழுநிலம் நெளிய ஈண்டி - கூற்றுவன் சினந்தாற் போன்ற படை கொழுவிய நிலம் நெளியுமாறு கூடியதனால்; பாற்கடல் பரப்பின் வெள்வாள் சுடர் ஒளி பரந்த - பாற்கடலின் பரப்பைப்போல, வெண்மையான வாளின் சிறந்த ஒளி பரவின்.

   (வி - ம்.) ஏற்றுரி - காளையின் தோல். இடிமுரசம் : வினைத்தொகை : உவமைத்தொகையுமாம். காற்றால் எறியப்பட்ட கடல் போல என்க. தானை - படை. வெள்ளிய வாட்படை பிறழ்தல் பாற்கடல் போல் தோன்றிற்று என்க.

( 51 )
2153 புதையிரு ளிரியப் பொங்கிக்
  குங்குமக் கதிர்க ளோக்கி
யுதையத்தி னெற்றி சோ்ந்த
  வொண்சுடர்ப் பருதி போலச்
சுதையொளி மாடத் துச்சி
  வெண்குடை நீழற் றோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன்
  விழுப்படை காணு மன்றே.

   (இ - ள்.) புதை இருள் இரியப் பொங்கி - மிக்க இருள் கெடுமாறு பொங்கி; குங்குமக் கதிர்கள் ஓக்கி - செந்நிறக் கதிர்களை வீசி; உதையத்தின் நெற்றி சேர்ந்த - உதய மலையின் உச்சியிலே எழுந்த; ஒண்சுடர் பருதி போல - சிறந்த ஒளியை வீசும் ஞாயிறு போல; சுதை ஒளி மாடத்து உச்சி - வெண்மையான ஒளியையுடைய மாடத்தின் உச்சியிலே; வெண்குடை நீழல் - வெண்குடையின் நீழலிலே; விதையத்தார் வென்றி வேந்தன் தோன்றி - விதைய நாட்டு வென்றி மன்னன் எழுந்தருளி; விழுப்படை காணும் - தன் சிறந்த படையை நோக்கத் தொடங்கினான்.